Skip to main content

அலைந்து, திரிந்தும் அகப்படவில்லை மணப்பெண்..! நின்று போன எம்.எல்.ஏ., திருமணம்!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஈஸ்வரன். 43 வயதை கடந்த இவர் திருமணம் செய்ய முடிவு செய்து சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பெரியார் நகர் காலனியில் வசிக்கும் ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்பவரை மணப்பெண்ணாக நிச்சயம் செய்து மணநாள் 12.09.18 என்றும் திருமணம் பண்னாரியம்மன் கோயிலில் என்றும் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் என பத்திரிகை அச்சடித்து கொடுத்து வந்தார்.

பெண் பார்க்க வந்த போதே எனக்கு இந்த எம்.எல்.ஏ., மாப்பிள்ளை பிடிக்கவில்லை என திருமணத்திற்கு மறுத்த சந்தியாவை அவரது குடும்பத்தினரும் எம்.எல்.ஏ.வான மணமகன் ஈஸ்வரனும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மணப்பெண் வசிக்கும் காலனி வீட்டுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக இருந்தது அதை ஒரே நாளில் கான்கிரீட் சாலையாக மாற்றினார் எம்.எல்.ஏ., ஈஸ்வரன். எதை கண்டும் அசராத மணமகள் சந்தியா கட்டாய திருமணத்தில் விருப்பம் இல்லையென வீட்டை விட்டே வெளியேறி தனது கல்லூரி தோழியின் மனப்பாறை வீட்டுக்குச் சென்றார்.
 

hurts


பிறகு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தியாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ். அப்போது, என் அப்பா வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதாலேயே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் எனக்கு திருமணம் வேண்டாம் என வாக்குமூலம் கொடுத்தார் சந்தியா. நீதிபதியும் சந்தியாவின் பெற்றோர்களிடம் துன்புறுத்தக்கூடாது என எச்சரித்து சந்தியாவை அனுப்பி வைத்தார்.

இதன் பிறகு விரக்தியடைந்த மணமகனான எம்.எல்.ஏ.ஈஸ்வரன் எனக்கு பெண் கொடுக்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். திட்டமிட்டபடி அதே நாள் அதே இடம் தலைமை முதல்வர் தான் திருமணம் நடக்கும் என சபதமிட்டு தனது உறவினர்கள், நண்பர்கள், ஜோதிடர்கள், திருமண புரோக்கர்கள் என ஒரு பெரிய டீமையே களம் இறக்கினார். நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி என பல மாவட்டங்களில் பெண் தேடும் படலம் நடந்தது. அது மட்டுமில்லாது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் தலித் பெண்கள், பணிபுரியும் மகளிர் என விபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பெண்களின் குடும்பத்தோடு தொடர்பு கொண்டு பெண் கேட்டார்கள் எம்.எல்.ஏவுக்காக களம் இறக்கிய குழுவினர்.
 

hurts


எம்.எல்.ஏ.ங்கறது அரசாங்க பதவி இல்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பவருனு யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்லைங்க வயசாகிப் போச்சு. அப்பா வயசுனு ஏற்கனவே நிச்சயித்த பெண்னே சொல்லியிருச்சு.. என ஒவ்வொரு பெண் குடும்பத்திலிருந்தும் பதில் வந்துள்ளது. தனக்கு எப்படியும் ஏதோ ஒரு பெண் கிடைத்து விடுவாள் என நம்பிக்கையுடன் இருந்த எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் முடிவு செய்யப்பட்ட பன்னாரியம்மன் கோயிலில் திருமண பந்தல் வரை போட்டு வைத்தார். 11ந் தேதி மாலை வரை அலைந்து, திரிந்தும் எந்தப் பெண்னும் மணமகளாக அகப்படவே இல்லை. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்ட எம்.எல்.ஏ. ஈஸ்வரன் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடியை தலைமை ஏற்க ஏற்பாடு செய்த அமைச்சர் பவானி கருப்பணனை தொடர்பு கொண்டு மணப்பெண் ஏதும் அமையலங்க கல்யாணத்தை நிறுத்தி விட்டேன் என தகவல் கொடுத்துள்ளார்.

நின்று போன திருமணத்தை அதே தேதியில் நடத்துவதாக எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முடிவு செய்திருக்க கூடாது. ஆர்ப்பாட்டம், ஆராவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக தன் வயதிற்கேற்ற ஒரு பெண்னைப் பார்த்து சிக்கனமாக திருமணத்தை நடத்த வேண்டும் என தொகுதி ர.ர.க்கள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.