Skip to main content

திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு நடந்து சென்றவர் பலி!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

 

thiruppathi

 

உலகின் பணக்கார கடவுளாக வர்ணிக்கப்படும் திருப்பதி - திருமலை வெங்கடேசபெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 12ந்தேதி துவங்கியுள்ளது. வரும் 21ந்தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவம் விழாவுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வீதியுலா வரும் பெருமாளை தரிசனம் செய்ய செல்வார்கள். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெருமாள் பக்தர்கள் நடந்தே திருமலைக்கு சென்றுக்கொண்டுள்ளனர்.

 

திருவண்ணாமலையை சேர்ந்த காசி என்பவர் பெருமாளை தரிசனம் செய்ய நடந்து சென்றுள்ளார். ஆந்திரா மாநிலம் சித்தூரை அடுத்த குடிப்பாலா மண்டலத்தில் உள்ள பன்னாட்டு கிராமம் அருகே நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அவருடன் 10க்கும் மேற்பட்டோர் முன்னும் பின்னுமாக சாலையின் ஓரம் நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார்.

 

இன்று மதியம் 2 மணியளவில், வேலூரிலிருந்து சித்தூர் நோக்கி சென்ற தமிழ்நாடு அரசுப்பேருந்து எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுகிறேன் என்கிற பெயரில் சாலையோரம் பாதயாத்திரை சென்றுக்கொண்டுயிருந்த காசி மீது மோதியது. இதில் சம்பவயிடத்திலேயே காசி இறந்துள்ளார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டடது. அடிப்பட்டவரை உடனடியாக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். 

 

இந்த தகவல் குடிப்பாலா காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து வந்த போலிஸார் இறந்த காசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்திவரும் போலிஸார் விபத்து ஏற்படுத்திய பேருந்தை காவல்நிலையத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்பத்தோடு வி.ஐ.பி. தரிசனம் வேண்டுமா? - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Tirupati Devasthanam Announcement VIP with family Want a vision

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன. 

 

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து, ராம நாமத்தை போல் கோவிந்த நாமத்தை ஒரு கோடி எழுதி அனுப்பும் இளைஞர்களுக்கு வி.ஐ.பி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

 

திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான புதிய அறங்காவலர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி கூறியதாவது, “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக விமர்சனம் செய்ததற்காக திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான குழுவினர் சார்பில் எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்த விஷயம் தெரியாமல் சனாதன தர்மம் குறித்து விமர்சனம் செய்வதால் சமூகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சனாதன தர்மத்தை இந்து மக்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். இது குறித்து நாம் மக்களுக்கு பிரச்சாரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இளைஞர்களிடையே இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நிகழ்ச்சியை ஏழுமலையான் கோவிலில் இருந்து தொடங்க உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, ராம நாம பாணியில் கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

 

மேலும், 10 லட்சத்து 1,116 முறை கோவிந்த நாமத்தை எழுதி வருவோருக்கு ஏழுமலையான் தரிசன பாக்கியம் கிடைக்கும். மேலும், சனாதன தர்மத்தை ஊக்கப்படுத்தவும், இளமைப் பருவத்திலேயே பக்தியை அதிகரிக்கவும், எல்.கே.ஜி முதல் பி.ஜி வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு சனாதன தர்மத்தையும், மனிதாபிமானத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதையை 20 பக்கங்களில் சுருக்கிட்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அதற்காக மொத்தம் 1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார். 

 

 

Next Story

“கோவிந்தா... கோவிந்தா...” - திருப்பதியில் ஷாருக்கான், நயன்தாரா

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Actor Shah Rukh Khan, his daughter Suhana Khan and actress Nayanthara offered prayers at Sri Venkatachalapathi Swamy in Tirupati..

 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை தமிழின் முன்னணி இயக்குநரான அட்லீ இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 7-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது

 

Actor Shah Rukh Khan, his daughter Suhana Khan and actress Nayanthara offered prayers at Sri Venkatachalapathi Swamy in Tirupati..

 

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தன் மகளுடனும், நடிகை நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். எப்போதும் கோட் சூட் உடன் இருக்கும் ஷாருக்கான் வெள்ளை உடையில் பட்டு அங்கவஸ்திரம் போட்டிருந்தார். திருப்பதியில் சாமி கும்பிடச் சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது