Skip to main content

வ.உ.சி. துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் 5 பேருக்கு நோட்டீஸ்

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
voc

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

நெல்லையை சேர்ந்த முத்துராமன்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் இயங்கிவருகின்றது.

 

தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த 2007 ஆண்டு 15.8 மில்லியன் டன் சரக்கு கையாள அனுமதி பெற்றுவிட்டு,தற்போது ஆண்டுக்கு ஆண்டு சரக்கு கையாளுவது அதிகரித்துள்ளதாகவும்,கடந்த 2016-17 ஆகிய ஆண்டில் 44.94  மில்லியன் டன் சரக்கு கையாண்டுள்ளனர்.   அனுமதிக்கப்பட்ட அளவைவிட சரக்கு கையாளுவதால் சுற்றுசூழல் அதிக மாசடைந்து வருகின்றது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதில், துறைமுகத்தில் சுற்றுசூழல்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை  அமல்படுத்தவில்லை என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.  கடந்த 2013 ஆண்டு உச்சநீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவில்,தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் நீண்ட நாட்களாக ஒப்புதல் இன்றி செயல்பட்டதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது. மேலும் தொழிற்சாலைகள் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் முத்துநகரம் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாசடைந்த மாநகரம் என அழைக்கப்படுகிறது.  மாசு தன்மை அதிகமாக இருப்பதால் நகர்பகுதிகளில் விஷத்தன்மை அடைந்துள்ளது. எனவே தூத்துக்குடி துறைமுகம் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, " மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் , மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய பொறியாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Supreme Court Notice to Election Commission

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டுகளை (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) முழுமையாக எண்ணக் கோரி ஏ.டி.ஆர். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரங்களில் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கூடுதல் அலுவலர்களை நியமித்து விவிபேட் இயந்திரத்தில் பதிவான அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

Next Story

வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The Supreme Court ordered the Income Tax Department to take action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த 1993 - 94, 2016 - 17, 2017 - 18, 2018 - 19 மற்றும் 2019 - 20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதே சமயம் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்ய தடைகோரி காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014 - 15 நிதியாண்டு முதல் 2016 -17 நிதியாண்டு வரை ரூ. 1745 கோடி வருமான வரி பாக்கி இருப்பதாக புதிய நோட்டீஸை அனுப்பியது. இதனையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாடியது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (01.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், “காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ. 1700 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கமாட்டோம்” என உறுதியளித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது” என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.