Skip to main content

விருத்தாசலம் வேளாண் விற்பனை கூட முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் மூன்று முறை சாலை மறியல்-  போக்குவரத்து பாதிப்பு

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

vi


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம், திருமுட்டம் உள்ளிட்ட வட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் சம்பா சாகுபடி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருவதால் விற்பனை கூடத்திற்கு தினந்தோறும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் வந்து கொண்டிருக்கின்றன. மூட்டைகளின் வரத்து அதிகமாக இருப்பதால் வேளாண் விற்பனை கூடத்தில் மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான குடோன் வசதி இல்லை.  அதனால் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள திறந்தவெளி  விளை நிலத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள்  அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் பனி கால இரவுகளில் கூட  விவசாயிகள் தங்குவதற்கு சரியான இட வசதி இல்லை. அத்துடன் குடிநீர்,  கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாததால் விவசாயிகள்  பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

vi


இந்நிலையில் ஜந்து நாட்களாக காத்துக்கிடந்த விவசாயிகளின் நெல் மூட்டைகளை எடைபோட்டு விற்பனை விலையை அறிவித்த போது , விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஒரு மூட்டை நெல் நேற்று வரை 1500 ரூபாய்க்கு விலை போனதாகவும், தற்போது 1200 ரூபாய்க்கு வியாபாரிகள் விலை நிர்ணயிப்பதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.  இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விருத்தாசலம் கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

 

ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டும் விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. மேலும் உள்ளூர் வியாபாரிகளின் கமிஷனுக்காக விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விலை குறைப்பதும்,  அதனை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் செயல்படுவதால், தங்களுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை என்றும்,  கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் கூறி சாலையில் அமர்ந்து இருந்தனர். 
இதேபோல் பழைய வேளாண் விற்பனை கூடத்தில் கடந்த நான்கு நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.  அதனை கண்டித்து நேற்று இரவு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம் -  கடலூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அனிவகுத்து நின்றன.

 

தமிழக அரசு அறிவித்த விலை கொடுக்காமல், விவசாயிகளை அழிக்க நினைக்கும் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் முறைகேடுகளால், விவசாயம் செய்யாமல் வேறு தொழில் செய்து பிழித்துகொள்ளாலாம் என்று பெண்கள் கதறுகின்றனர்.


தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் விவசாயம் செய்வது விட்டு, கூலி வேலைக்கு போக வேண்டியது தான் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.  பின்னர் காவல்துறையினர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு உரிய விலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.