Skip to main content

குப்பையை பிரித்து தந்ததால் தங்கம்... அசத்தும் வேலூர் இளைஞர்!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

வேலூர் மாநகராட்சி 24 வது வார்டில் வசிக்கும் பொதுமக்களிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுயிருந்தார் வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநரான தினேஷ் சரவணன். அந்த அறிவிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கவேண்டும். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து 30 நாட்களும் குப்பையை பிரித்து போடுபவர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். முப்பதாவது நாளில், ஒரு நாள் விடாமல் குப்பையை பிரித்து கொடுத்த அனைவரது பெயரையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு குடுவையில் போடப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்களுக்கு தங்கமும், 4 நபர்களுக்கு வெள்ளியும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

அதன்படி கடந்த 45 நாட்களாக 24வது வார்டு மக்களை தொடர்ந்து கண்காணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களில், இரண்டு பேருக்கு தங்கமும், 4 பேருக்கு வெள்ளி வழங்கும் நிகழ்வு மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, மண்டலம் 2 சுகாதார அலுவலர் சிவக்குமார் போன்றோர் வெற்றி பெற்ற பெண்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வழங்கினார்கள்.

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +2 மாணவிகள் 250 பேருக்கு தேர்வு எழுத எழுது பொருட்கள் இலவசமாக ஆசிரியர்கள் மூலமாக வழங்கியுள்ளார். வயதான, ஏழ்மையான தனிமையில் வாழும் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட உதவிகள் வழங்குவது, வீடு கட்ட பொருள் உதவி, கிராமப்புற பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தருவது, தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது என செயல்படுகிறார்.


இதுக்குறித்து 31 வயதான தினேஷ் சரவணனிடம் நாம் பேசியபோது, ''எனது அப்பா செல்வராஜ், பால் வியாபாரி. அம்மா தயிர் வியாபாரம் செய்து வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. அதில் பெரிய அண்ணன் சரவணன், 8வது வரை மட்டும்மே படித்திருந்தார். குடும்ப தேவைக்காக அவரும் அப்பாவுடன் இணைந்து பால் வியாபாரம் செய்து மற்ற மூன்று பேரை படிக்க வைத்தார். அவர் பால் வியாபாரம் செய்ததோடு, எங்களை விட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், படிக்கவைக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

2014ல் அவரது 35வது வயதில் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவரால் உதவி பெற்றவர்கள் பலர் வந்து அழுதபடி அவர் செய்த உதவிகளை நினைவு கூர்ந்தபோது கலங்கிவிட்டோம். அவர் இறப்புக்கு பின்பு அவரின் சமூக தொண்டு பாதியில் நின்றுவிட்டது. அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தான் பி.இ முடித்துவிட்டு சென்னையில் வேலைக்கு சேர்ந்தியிருந்தேன். அண்ணன் செய்து வந்த உதவிகள் திடீரென்று நிற்பதை மனம் ஏற்கவில்லை. அதை ஏன் நாம் செய்யக்கூடாது என நினைத்து நான் இந்த சேவையில் இறங்கினேன். என்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து தான் இந்த உதவிகளை செய்கிறேன். இதற்காக வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள் வேலூர் வந்துவிடுவேன். என்னால் முடிந்தளவு தேவை இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். இதையெல்லாம் நான் முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் பதிவிட்டு வந்தேன். அதனைப்பார்த்து தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ட்விட்டரில் என்னை பாராட்டினார்.

 

சமூக வளைத்தளம் வழியாக நான் செய்யும் உதவிகளை பார்த்தவர்கள் சிலர், எங்களால் களத்தில் இறங்கி உதவ முடியாது, நீங்கள் எங்கள் சார்பாக உதவ முடியுமா எனக்கேட்டு தொடர்பு கொண்டார்கள். நான் உதவி செய்ய எந்த அமைப்பையும் வைத்திருக்கவில்லை, தனிப்பட்ட முறையில், சொந்தப்பணத்தில் இருந்துதான் உதவி செய்கிறேன். மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவினால் சரியாக இருக்குமா என யோசித்தேன். சிலரின் அன்பால் அவர்கள் தந்த நிதியை வாங்கி அவர்கள் சொல்வது போல் உதவுகிறேன். அதுக்குறித்த கணக்கை பிளாக் வழியாக வெளிப்படையாக தெரிவித்துவிடுகிறேன்'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.