Skip to main content

காவல்நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி! தடுக்கச் சென்ற பெண்காவலர் படுகாயம்!!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

vathalakundu

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலக்குண்டு அருகே பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக ரேவதி பாலமுருகனை விட்டுப் பிரிந்து வாழ்ந்துள்ளார். பாலமுருகன் பலமுறை அழைத்தும் ரேவதி அவருடன் சேர்ந்து வாழ வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மது போதையில் காவல் நிலையம் வந்த பாலமுருகன், அங்கிருந்த காவலர்களிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கச் சொல்லி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலமுருகன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்துத் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உள்ளார்.

 

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் மஞ்சுளா, பாலமுருகனின் கையில் இருந்த கத்தியைப் பிடுங்க முயன்றுள்ளார். பாலமுருகன் கத்தியைக் கொடுக்க மறுத்து, கத்தியைப் பிடுங்கியபோது, பெண் காவலர் மஞ்சுளா கையில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பவுலோஸ், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, காயமடைந்த பெண் காவலர் மஞ்சுளாவைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.