Skip to main content

வைகோ இனம் பார்த்து பழக வேண்டும் களம் பார்த்து கால் வைக்க வேண்டும் - ம.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. துரைமுருகன்!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
duraimurrugan

 

ம.தி.மு.க.வின்  முப்பெரும் விழா மாநில மாநாடு இன்று ஈரோட்டில் நடந்தது. இம் மாநாட்டில் தி.மு.க. பொருளா ளர் துரைமுருகன்  திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.  .தி.மு.க.வின்  தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக இந்த மாநாட்டிற்கு நான்  வந்துள்ளேன். இதில்  கலைஞரின் படத்தை திறந்து வைத்ததில் நான் பெருமை படுகிறேன் .அதை போலவே எனது  50 ஆண்டுகால நண்பர் வை.கோ.வின் வாழ்வை வாழ்த்துவதிலும் எனக்கு  மகிழ்ச்சி. நாங்கள் இருவருமே கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள். நாங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கலைஞரின் சக்தி எங்களை வழிநடத்தும். 

 

 

கலைஞர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அதனால் இந்த சமூகம் அடைந்த பயன்கள் எல்லாம் தலைவர் வாழ்ந்தபோது பாராட்டதவர்கள் தற்போது பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. வேறுபட்ட கொள்கைகளை, கருத்துக்களை கொண்ட தலைவர்கள் கூட தற்போது கலைஞரின் புகழை பாடுவது அவர் ஆற்றிய பணிகளுக்கான அங்கீகாரம் ஆகும்.

 

நானும் வை.கோவும் ஒன்றாக சட்டக் கல்லூரியில் படித்த்தவர்கள். அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்றைக்கும் தொடர்கின்றது. எங்கள் இருவருக்கும் எப்போதுமே ஊடல்கள் இருந்தது இல்லை. அரசியலில் மாறுபட்டு பிரிந்து இருந்த போது நான் வைகோவை பற்றி வெளுத்து வாங்கி இருக்கிறேன். ஆனால் என்றைக்கும் என்னைப்பற்றி ஒரு நாளும் வைகோ தவறாக பேசியது இல்லை.. தன் உயிரை விட கலைஞரை அதிகம் நேசித்தவர் வைகோ. பாராளுமன்றத்தில் என் நண்பன் வைகோ பேசியது போல எந்த தமிழனும் பேசியது இல்லை. பாராளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தீடீரென்று எழுந்து செல்ல முயன்றார். அப்போது வைகோ  ஓடாதே நில் என்று தைரியமாக கேள்வி கேட்ட ஒரே தமிழன் வைகோ ஒருவர்தான். இந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். ஆம் ஐம்பது ஆண்டுகாலம் எரிமலை மீது அவர் நடந்து வந்ததுதான் அதிகம். இனி அவர் அடுத்து வருகிற அரை நூற்றாண்டில் இனம் பார்த்து பழக வேண்டும். களம் பார்த்து கால் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரின்  ஆற்றல், அறிவு, தைரியம் தற்போது தமிழகத்திற்கு தேவையாக உள்ளது. வைகோவின் தியாகம் வீண் போகாது.  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பார்க்க வவுனியா சென்றபோது வைகோ பத்திரமாக திரும்பி வந்துவிடுவாரா என்று கேட்டு கலைஞர் முதன் முறையாக கண் கலங்கினார். அதைதொடர்ந்து  திண்டுக்கல் நடந்த மாநாட்டின் போது என்னை வைகோ இழந்தாரா அல்லது வைகோவை நான் இழந்தோனா என்று கூறி இரண்டாவது முறையாக கலைஞர் கண் கலங்கினார். 

 

அரசியலில் பிரிவுகள் வரலாம். ஆனால் கொள்கையில் என்றைக்கும் பிரிவு வரக்கூடாது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போதும் திராவிட இயக்க கொள்கையிலிருந்து வைகோ மாறவில்லை. அரசியலில் எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் தியாகம் செய்தவர் வை.கோ." என்ற துரைமுருகன், 

"அதேபோல் வை.கோவுக்கு மட்டும் அரசியலில் பொன்விழா அல்ல நானும் 1954 லிலேயே அரசியலுக்கு வந்தவன் தான் எனக்கும் அரசியலில் பொன் விழா தான்." என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.