Skip to main content

'ஒரு ஆஜானுபாகுவான வழக்கறிஞர்...'  வைகோ - ஆசிரியர் நக்கீரன் கோபால் கலகல சந்திப்பு

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், நேற்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். காரணமேதும் கூறாமல், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது அரசியல் சட்டம் 124இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், வழக்கறிஞர் பெருமாள், இந்து என்.ராம் உள்ளிட்டோரின் வாதத்தை ஏற்று, ஆசிரியர் நக்கீரன் கோபாலை கைது செய்யமுடியாது என்று தீர்ப்பளித்து விடுவித்தார். நேற்று நக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று, தடுக்கப்பட்டபோது, தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக தலைவர் வைகோவை இன்று காலை சந்தித்து நன்றி செலுத்தினார் நக்கீரன் கோபால்.

 

vaiko nakkeeran gopal



சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கைது நடவடிக்கை குறித்து விளக்கிய ஆசிரியர் நக்கீரன் கோபால், தொடர்ந்து, "கைது பண்ணி சிந்தாதிரிப்பேட்டையில் வச்சிருந்தப்போ என்கிட்ட வந்து வைகோ சார் வந்திருக்கார்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அரசியல் தலைவரா இல்லாம ஒரு வழக்கறிஞரா வந்திருக்கிறதா சொன்னாங்க. 'ஒரு ஆஜானுபாகுவான வழக்கறிஞர் நமக்கு ஆதரவா இருந்தா நல்லதுதானே'னு எனக்கு மகிழ்ச்சியா இருந்தது. ஆனா, நேரமாகியும் அண்ணன் உள்ள வரல. என்னனு கேட்டப்போ, "அவர் வந்துட்டு கத்திட்டு போய்ட்டாரு"ன்னு சொல்றாங்க. எனக்கு என்ன விஷயம்னு தெரில. வெளியில கோஷா ஹாஸ்பிடலுக்கு என்னை செக்-அப்க்கு கூட்டிப் போனாங்க. அங்க வந்த ஸ்டாலின் அண்ணன் சொன்னார், "வைகோ கலக்கிட்டார், தர்ணாலாம் பண்ணி பெரிய இஸ்யூ ஆக்கிட்டார்"னு சொன்னாங்க. இப்படி, இந்த நல்ல முடிவு கிடைக்க முக்கிய காரணமா, எல்லோரும் ஒற்றை கோடாக நிற்பதற்கு முதல் புள்ளியாக நின்றவர் அண்ணன் வைகோ. அவருக்கு நம்ம சார்பா, ஊடகம் சார்பா நக்கீரன் சார்பா அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்" என்று கூறினார்.        
          


      

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.