Skip to main content

கோவில் சொத்துக்களை அபகரிக்க முயற்சி: ஒன்பது சமுதாய மக்கள் சாலை மறியல்!

Published on 05/04/2019 | Edited on 09/04/2019

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பொதுவாக வழிபட்டு வந்துள்ளனர். இந்த கோவிலில் உள்ள அம்மன் சக்தி வாய்ந்த கடவுள் என்று பக்தர்களிடையே நம்பிக்கை இருந்ததால் கோவிலின் வருமானம் பல கோடிகளை தாண்டியது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோவிலை அபகரிக்கும் நோக்கில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் செயல்பட்டு வந்ததாகவும், கோவில் வரவு செலவுகளை சரிவர காட்டாமல் ஊழல் செய்ததாகவும், மற்ற 9 சமுதாய மக்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை என்றும் பிரச்சனை எழுந்தது. இதனையடுத்து

 

 

 Trying to grab temple assets: Nine community people block road

 

சமூக ஆர்வலர் ராஜா சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கோவிலை அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து சமுதாயத்தில் இணைந்தும் சம உரிமை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவிலை கொண்டுவருவதற்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

 

 

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கோவிலை கையகப்படுத்த சென்று இருந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த 8 உண்டியல்கள் மற்றும் வரவு செலவு இனங்களுக்கான தஸ்தாவேஜுகள் மறைக்கப்பட்டிருந்தன. இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அப்போது கடந்த வருடம் சித்திரை பொங்கல் திருவிழா நடைபெற வேண்டி இருந்ததால் குழப்பங்களை நீக்க கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் எப்போதும்போல் சம உரிமையுடன் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. 

 

 

இதனையடுத்து இந்த ஆண்டும் அதேபோல் பிரச்சினை எழுந்தது. இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில் நீதி அரசர்கள் எதிர்வரும் 2019 ஏப்ரல் மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருவிழா நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே அனைத்து சமூகத்தினரும் சம உரிமையுடன் திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யும் படியும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அனைத்து சமுதாயத்தையும் அழைத்து கடந்த ஆண்டுகளைப் போல் சமாதான கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தேனி மாவட்ட கலெக்டர் பெரியகுளம் கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சமாதான கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே நேற்று உத்தரவை மீறும் வகையில் முகூர்த்தக்கால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்தனர்.

 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஒன்பது சமுதாய மக்கள் இதற்கு நியாயம் கேட்டு தேனி நெடுஞ்சாலையில் எம்ஜிஆர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான இந்த சூழலில் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் அவர்களை தடியடி செய்து அப்புறப்படுத்தி கலைத்தனர்.காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.