
தமிழகத்தில் இன்று ஒருநாள்கரோனாபாதிப்பு என்பது23,989ஆகபதிவாகியுள்ளது. நேற்று23,459ஆகபாதிப்பு பதிவான நிலையில்இன்றையஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்றுகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 23,978 பேர்தமிழகத்திலும், மீதம் உள்ள 11பேர் வெளிநாடு மற்றும்வெளிநாடுகளில் இருந்துதமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்றுகரோனாபாதிப்பு 1,489 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,43,536 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் இன்று 8,978 பேருக்குகரோனாஉறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில்கரோனாஒருநாள் பாதிப்பு என்பது 8,963 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில்ஒரேநாளில்11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில்கரோனாவால்உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்கரோனாசிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,31,007 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 10,988 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 27,47,974 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-1,732, ஈரோடு-542, காஞ்சிபுரம்-697, கன்னியாகுமரி-659, மதுரை -550, செங்கல்பட்டு-2,854, தஞ்சை-443, திருவள்ளூர்-1,478, சேலம்-427, திருப்பூர்-667, திருச்சி-443, ராணிப்பேட்டை-283, நாமக்கல்-240 பேருக்குகரோனாஇன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)