Skip to main content

ஏற்காட்டில் டி.எம்.செல்வகணபதி கிடா விருந்து! சேலம் திமுகவில் டென்ஷன்!!

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

se


ஏற்காட்டில் திமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு மாபெரும் கிடா விருந்து வைத்து அசத்தியிருக்கிறார், அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி. திடீர் விருந்துக்கான காரணம் தெரியாததால், அவருக்கு எதிர் முகாமில் இருக்கும் மத்திய மாவட்ட திமுகவினர் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர்.

 


தமிழகத்தில் கடந்த 1991-1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதி மீது சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றார். 

 

se


இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அவர் அதிமுகவில் இருந்து விலகி, கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். 2009ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் செல்வகணபதியின் உழைப்புக்குப் பரிசாக, 2010ல் அவரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கி அழகு பார்த்தது திமுக தலைமை. நிலைமை சீராக போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த 2014, ஆகஸ்ட் 19ம் தேதி, சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

 


அதைத் தொடர்ந்து அவருடைய மாநிலங்களவை எம்.பி. பதவி பறிபோனது. எனினும், அவரை கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமித்தது திமுக. இந்நிலையில், 27.10.2017ம் தேதி, சேலத்தில் 27வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக செல்வகணபதி தரப்புக்கும், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று நள்ளிரவு மர்ம நபர்கள், செல்வகணபதி தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரில் பெட்ரோல் குண்டை வீசினர். 

 


முதலில் ராஜேந்திரன் தரப்பினர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றே யூகங்கள் கிளம்பின. காவல்துறை விசாரணையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது செல்வகணபதியின் ஆதரவாளர்தான் என்பது தெரிய வந்தது. இது, செல்வகணபதி மீது கட்சியின் தலைமைக்கு பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டுவிட்டது.

 


ஆனாலும் டி.எம்.செல்வகணபதி, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோருடன் இணக்கமாக இருந்து வருவதும், வழக்கறிஞர் ராஜேந்திரனுடன் தாமரை இலைமேல் தண்ணீர் போல இருப்பதும் நீடிக்கிறது. 

 

se


இந்நிலையில்தான், ஏற்காட்டில் உள்ள 'திலகம் நெஸ்ட்' ஹோட்டலில் அண்ணா நினைவு நாளான, கடந்த 3.2.2019ம் தேதியன்று, தனது ஆதரவாளர்களுக்கு மாபெரும் கிடா விருந்து அளித்திருக்கிறார் டி.எம்.செல்வகணபதி. இதில், வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம், பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரும் அவர்களுடைய ஆதரவாளர்களும்கூட கலந்து கொண்டு, விருந்தை சிறப்பித்துள்ளனர். விருந்துக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், செல்வகணபதி திமுகவில் இணையும்போது அவருடன் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் என்கிறார்கள், விருந்தில் கலந்து கொண்ட திமுக பிரமுகர்கள்.

 


''ஏற்காடு கொட்டச்சேடு - குப்பனூர் வழித்தடத்தில் உள்ள சூரக்குடி முனியப்பன் சாமி ரொம்பவே சக்தி வாய்ந்ததுங்க. அந்த முனியப்பனுக்கு ஏ-ழு வருஷத்துக்கு முன்னாடி டி.எம்.செல்வகணபதி ஏதோ ஒரு வேண்டுதல் வெச்சிருந்தாராம். அது பலிச்சிடுச்சுனும், அதுக்காகத்தான் கிடா வெட்டினதாகவும் சொல்றாங்க. இந்த விருந்துல ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க கலந்துக்கிட்டாங்க. ஏற்காடு ஒன்றியத்தைக் காட்டிலும் தலைவாசல், ஆத்தூர் ஆகிய ஒன்றியங்களில் இருந்துதான் அதிகளவில் விருந்துக்கு வந்திருந்தாங்க.

 


வேண்டுதல்தான் பலிச்சுடுச்சே... என்ன வேண்டுதல்னு இப்பவாவது சொல்லுங்கண்ணேனு பல பேர், செல்வகணபதிக்கிட்ட கேட்டுட்டாங்க. அவரும் சிரிச்சே மழுப்பிட்டார். கிடா மட்டுமின்றி சுவையான நாட்டுக்கோழி வருவலும் விருந்துல இடம்பிடிச்சிருந்தது. இந்த விருந்துக்கு சில நாள்கள் முன்னாடியே, கட்சிக்காரர்களை கலந்து கொள்ளும்படி, அவருடைய ஆதரவாளர் ஒருவர் எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தார். விருந்து முடிந்ததும் கட்சியினர் பலர் அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்,'' என்றார் திமுக பிரமுகர் ஒருவர்.

 


வேறு சிலரோ, சூரக்குடி முனியப்பனுக்கு, தனது அரசியல் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று நேர்ந்து கொண்டு மூன்று கருப்பு கிடாக்களை டி.எம்.செல்வகணபதி வெட்டியதாகவும், அதைத்தான் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியிருக்கிறார் என்றும் கூறினர்.

 


''திமுக தலைவர் கலைஞர் மறைவால் இந்தாண்டு கட்சி சார்பில் பொங்கல் விழாகூட கொண்டாடப்படவில்லை. அப்படியிருக்கும்போது செல்வகணபதி போன்ற கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரே, தனது ஆதரவாளர்களைத் திரட்டி கிடா விருந்து வைத்திருப்பது அதிருப்தியாகத்தான் இருக்கிறது. இந்த விருந்து எதற்காக நடந்தது, சிலர் யூகிப்பதுபோல ஏதாவது உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட விருந்தா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார் சேலம் மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர். 


இது தொடர்பாக கருத்தறிய டி.எம்.செல்வகணபதியை அவருடைய செல்போன் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.