Skip to main content

ஜாமினில் வெளிவந்த நபர்; வெட்டி படுகொலை!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Tirupattur district alleary village family problem one passes away


திருப்பத்தூர் மாவட்டம், அல்லேரி கிராமத்தைச் சேர்ந்த தனது மாமன் மகள் ரம்யாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் 30 வயதான குமரன். 2014ல் ரம்யாவை அடித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து காவல்துறை குமரனை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமினில் வெளியே வந்த குமரன் மீது கோபத்தில் இருந்துள்ளனர் ரம்யா குடும்பத்தார்.

 

இதனால், அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி ஏலகிரி கிராமத்தில் வந்து தங்கியுள்ளார் குமரன். அஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரம்யா கொலை வழக்கு திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி ஏலகிரி கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனால் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது, பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். இந்நிலையில் குமரன் வீட்டுக்குவந்த ஒரு இளைஞர், குமரனை சரமாரியாக வெட்டி வீசிவிட்டுச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அஞ்சலி, தனது கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி அழுதுள்ளார். சாலையில் சென்றவர்களை கத்தி அழைக்க அவர்கள் வந்து வெட்டுப்பட்ட குமரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குமரன் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாருக்குச் சென்றதும் அவர், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். குற்றவாளியைப் பிடிக்க டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சில மணி நேரங்களிலேயே ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குமரனின் முதல் மனைவியான கொலை செய்யப்பட்ட ரம்யாவின் தம்பி ராஜீ எனக் கூறப்படுகிறது. தனது அக்காவை கொலை செய்ததற்கு பழிவாங்க முடிவு செய்ததாகவும், நீதிமன்றம் விடுதலை செய்துவிடும் என நினைத்து வெட்டி கொலை செய்ததாகவும் கூறுகிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.