Skip to main content

தமிழகத்தில் முதன்முதலாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம், அபராதம் விதிப்பு...

Published on 13/02/2019 | Edited on 14/02/2019

 

teacher


 


நெல்லை மாவட்டத்தின் பங்களா சுரண்டை நகரிலுள்ள பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவர் ஆசிரியை வசந்தி ஹாசிராணி. இவரது பதவி உயர்வு பள்ளி நிர்வாகத்தால் 02.06.2018ல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் முறைப்படி தென்காசி கல்வி மாவட்டக் கல்வி அலுவலரான ஷாஜகான் கபீரின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் மாவட்டக் கல்வி அலுவலகம் அவரது பதவி உயர்வை அங்கீகரிக்கவில்லை மேலும் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை வசந்தி ஹாசிராணி தனது பதவி உயர்வுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 

இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுப்பிரமணியன், திட்டமிட்டே தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் இந்த அங்கீகாரத்தை வழங்காமல் இழுத்தடித்திருக்கிறார். ஆகவே அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆபராதம் விதிக்கப்படுகிறது. அதனை தலைமை நீதிபதி நிவாரண கணக்கில் பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல இவரைப் போன்ற கல்வி அதிகாரிகளால்தான், தமிழகத்தின் கல்வித்தரம் அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. இரண்டாவது இடத்தில் இருந்து 18 வது இடத்திற்குத்தள்ளப்பட்டுவிட்டது. என்று வேதனையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் நீதியரசர்.
 

இத குறித்து நாம் மாவட்டக் கல்வி அலுவலர் ஷாஜகான் கபீரைத் தொடர்பு கொண்டபோது,

அவர் சரியான முறையில் அணுகவில்லை. எங்களிடம் தெரிவிக்காமலே நீதிமன்றம் சென்றுவிட்டார். எங்களிடம் சொல்லியிருந்தால் முடித்திருப்போம். அவருக்கான ஆர்டர் போடும் நிலையில் தானிருந்தோம் அங்கீகரித்து விட்டோம். அதற்குள்ளாக நீதிமன்றம் சென்று விட்டார். நீதிமன்ற உத்தரவை நாங்கள் மறுதினமே ரிவோக் செய்து விட்டோம் என்கிறார்.
 

தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வு, ஊதிய உயர்வு பி.எப். கடன் உள்ளிட்ட பல்வேறு நிவாரணம் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் வந்துதான் ஆகவேண்டும். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் காரணமில்லாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்று சொல்லும் ஆசிரியர்கள், தமிழகத்தில் இதுவரை எந்தக் கல்வி அதிகாரியும் இப்படி ஒரு கண்டனத்தைப் பெற்றதில்லை. என்கிறார்கள்.
 

கல்வித்துறையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இத் தீர்ப்பு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் தகவல்! 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rs.4 crore money confiscation issue; Released information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பபட்டுள்ளது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகியுள்ளது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.