Skip to main content

“காலமும் சரியில்லை, களமும் சரியில்லை.. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடிவெடுத்துவிட்டேன்..” டி. ராஜேந்தர் 

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

"The time is not right, the field is not right .. I have decided to stand aside and have fun." Rajendra

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மேலும் அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், தேசியக் கட்சித் தலைவர்கள் என தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

 

இந்நிலையில், இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அதிமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் களம். அதேபோல மறைந்துவிட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் இல்லாமல் திமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் களம். 

 

இரண்டு கட்சிகளுக்குமே அவரவருக்கு இருக்கிறது பலம். இது தவிர சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பக்கபலம். அது தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புது சிகிச்சை.

 

ஒவ்வொருவருடைய வார்த்தையில் இருக்கக்கூடிய வாக்கு வன்மை, வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப்படும் உண்மை அதற்கென்று ஒரு சக்தி இருக்கிறது என்று முன்னாள் முதல்வர்கள் சிலர் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள், அது ஒரு காலகட்டம்...  கொள்கையை எடுத்துச்சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக்காலம். ஆனால், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஓட்டு பெற்றுவிடலாம் என்று நினைப்பது இந்தக்காலம். 

 

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை அதனால் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். பத்தும்பத்தாததற்கு இது கரோனா காலம்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அணிய வேண்டும் முகமூடி. அதேபோல பக்குவப்பட்டவனாக இருக்க வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி. இந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுடைய லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை அரவணைக்கவும் இல்லை. நாங்கள் நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார். 

 

 

Next Story

'சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்'- நடிகர் சிம்பு அறிக்கை!

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

'We are taking him abroad for treatment' - Actor Simbu information!

 

இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவர் நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  

 

இந்நிலையில் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தந்தைக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்கிறோம். வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் முழு சுயநினைவுடன், நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்தவுடன் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கு, அனைவரின் அன்புக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.