Skip to main content

தேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்!!  

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

Three-phase electricity on election day ... Delta farmers in pain!

 

தேர்தலுக்குப் பிறகு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

 

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் சம்பா சாகுபடி, குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து 24 மணி நேரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை நம்பி, கோடை சாகுபடி மற்றும் முற்பட்ட குறுவை சாகுபடி தற்போது 40 ஆயிரம் ஏக்கர் அளவில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் சாகுபடிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த 7ஆம் தேதி வரை தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைத்து வந்தது. இந்நிலையில் மும்முனை மின்சாரம் என்பது கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவே வருகிறது.

 

தற்பொழுது 12 மணி நேரம் கூட முழுமையாக மின்சாரம் இல்லாததால் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல் பெரம்பலூரில் விவசாய பயன்பாட்டிற்காக 45 ஆயிரம் மின் மோட்டார்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கிணற்று நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் உள்ளனர்.  மின்மோட்டார் பயன்பாடுகள் மிக அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு மூன்று ஷிப்ட்களாக பிரித்து மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நடைமுறைக்கு வந்த அன்று ஒரு நாள் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதாக கூறும் விவசாயிகள், அதன் பிறகு வோல்டேஜ் குறைவாக வருவதாகவும், மின் மோட்டாரை இயக்க முடியவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Three-phase electricity on election day ... Delta farmers in pain!

 

மின் மோட்டார்களை இயக்க சுமார் 445 வோல்டேஜ் மின்சாரம் தேவை என்ற நிலை இருக்கும் பொழுது, 350 வோல்டேஜ் மட்டுமே மின்சாரம் வருவதால் முழுமையாக மோட்டார்களை இயக்கி நீரை பெற்று விவசாயம் செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர் விவசாயிகள். நேற்றுதான் உர விலையேற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில் அறிவிக்கப்பட்ட மும்முனை மின்சாரமும் வயல்தேடி வராதது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்பத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.