Skip to main content

மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

Three children passed away mother hospitalized

 

திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளி பரசுராமன். இவரது மனைவி அமுதா. இந்தத் தம்பதிக்கு 5 வயதான நிலவரசு, 4 வயதான குறலரசு, 3 வயதான யாஷினி என மூன்று குழந்தைகள் உள்ளனர். 

 

பரசுராமனுக்கும் அவரது மனைவி அமுதாவிற்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சண்டை அதிகமாகும்போது அமுதா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். உறவினர்கள், குடும்பத்தினர் சமாதானத்துக்குப் பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து மீண்டும் கணவருடன் வாழ்வார்.

 

ஆகஸ்ட் 3ம் தேதி இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்துள்ளனர். 

 

இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி மதியம் சதாகுப்பம் கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை தாய் அமுதா, வீசியதால் அவர்கள் தண்ணீர் குடித்து அழுதபடி இறந்துள்ளனர். 

 

இறுதியில் அமுதாவும் தற்கொலை செய்துக்கொள்ள ஆற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அமுதாவை ஆற்றில் இருந்து மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமுதாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

நீரில் மூழ்கிய குழந்தைகளை பலரும் ஆற்றில் குதித்து தேடினர். வெகுநேர தேடலுக்கு பிறகு மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த வாணாபுரம் காவல்துறையினர் சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற பிள்ளைகளை தாயே ஆற்றில் வீசி கொலை செய்ததும், அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வாணாபுரம் காவல் நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.