Skip to main content

வீடியோ காட்டி சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்றவர்கள் கைது..

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

Three arrested near salem and investigating

 

கிருஷ்ணகிரி அருகே, சிறுமியுடன் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுத்த வீடியோவைக் காட்டி, நண்பர்களுக்கு இரையாக்க முயன்ற புகாரின்பேரில் காதலன் உட்பட மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள வால்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்தச் சிறுமி, அவருடைய பக்கத்து ஊரான நெடுங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார்.  கரோனா ஊரடங்கு காரணமாக அவர் வீட்டில் இருந்துவருகிறார். உள்ளூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சந்திரகணேஷ் (32) என்ற இளைஞர், சிறுமியுடன் நெருங்கி பழகிவந்துள்ளார். 

 

அப்போது சிறுமியிடம் கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் பலமுறை 'நெருக்கமாக' இருந்துள்ளார். மேலும், சிறுமியுடன் தனிமையில் இருக்கும்போது ரகசியமாக செல்ஃபோனில் வீடியோவும் எடுத்துள்ளார். 

 

இந்நிலையில், கடந்த மே 26ஆம் தேதி அந்தச் சிறுமி, வீட்டின் பின்பக்கம் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு காலைக்கடன் கழிப்பதற்காக ஒதுங்கியுள்ளார். அப்போது சந்திரகணேஷ், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் தேநீர் கடை நடத்திவரும் ஜீவா (20), வாகன ஓட்டுநரான ரமேஷ் (31) ஆகியோருடன் அங்கு வந்துள்ளார். 

 

சிறுமியிடம் சந்திரகணேஷ் முதலில் தன்னுடனும், பிறகு நண்பர்களுடனும் தான் சொன்னபடி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்குச் சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரகணேஷ், இருவரும் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் காட்டி, தான் சொன்னபடி கேட்காவிட்டால் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

 

இதனால் கலக்கமடைந்த சிறுமி, அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனாலும், அடுத்தடுத்து நாட்களிலும் சிறுமியை சந்திரகணேஷ் மிரட்டிவந்துள்ளார். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் நடக்கக் கூடாதது நடந்துவிடும் எனக் கருதிய சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பெற்றோர் மகளை அழைத்துக்கொண்டு பர்கூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். 

 

இந்தப் புகாரின்பேரில் சந்திரகணேஷ், ஜீவா, ரமேஷ் ஆகியோர் மீது விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கற்பகம், வழக்குப் பதிவுசெய்து கைது செய்தார். சந்திரகணேஷிடம் இருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரிடமும் விசாரணை நடந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.