Skip to main content

'சாத்தான்குளம் இரட்டைக் கொலை'- 10 போலீசார் அரெஸ்ட்... அடுத்த குறி யார்? களமிறங்கும் சி.பி.ஐ!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

thoothukudi sathankulam issues police cbcid

 

தேசத்தையே உலுக்கிய, சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடியில் நடந்தேறிய தந்தை- மகன் இரட்டைப் படுகொலையில் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை, ஐ.ஜி. சங்கர் தலைமையில் வேகமெடுத்திருக்கிறது. கடந்த ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டத்திலேயே மையம் கொண்ட ஐ.ஜி தன் பணிகளை விரைவுபடுத்தியுள்ளார்.

 

தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவலர்களால் கடுமையாகச் சித்ரவதைச் செய்யப்பட்டது முதல் கோவில்பட்டி சப் ஜெயிலில் மரணமடைந்தது வரை, வழியோரம் நடந்தவைகளை சாட்சிகள், மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்களின் வாயிலாகவும் சி.பி.சி.ஐ.டி. டீம் திரட்டியிருக்கிறது.

 

thoothukudi sathankulam issues police cbcid

 

அதனடிப்படையில் ஆரம்பத்தில் 302 பிரிவான கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் காவலர்கள் குமார், முத்துராஜ் என 5 பேர் வளைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணையில் விட்டுப் பிடிக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவலர்கள் தாமஸ், சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு (08/07/2020) கைது செய்த சி.பி.சி.ஐ.டி அவர்களை ரிமாண்ட் செய்து பேரூரணி சிறையிலடைத்தால் பிரச்சினை நிச்சயம். பழைய கைதிகளுக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கு வரலாம் என்பதால், செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, மூவரையும் மதுரை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர். எஸ்.ஐ. பால்துரை, தாமஸ் இருவருக்கும் உடல் நலன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும் ஜெயராஜும், மகன் பென்னிக்சும் போலீசாரால் தாக்கப்பட்ட நேரத்தில் கொடூரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் எஸ்.ஐ.க்கள் போலீஸ் மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என மொத்தம் 14 பேர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் காவலர்கள் 10 பேரும் கைது வளையத்தில். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி.யினர். ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அனைவரையும் விசாரித்துள்ளனர்.

 

thoothukudi sathankulam issues police cbcid

 

இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் ஆரம்பத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்தது. கொலைத் தடயங்களை அழித்தல் என இரண்டு வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ.யின் விசாரணை மீதமுள்ளவர்களின் மீதும் பாயலாம் என்பதே தற்போதைய க்ளைமேட்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.