Skip to main content

திருவாரூர் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
k

 

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பதை இன்று மாலை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நேர்காணலுக்கு பிறகு   வேட்பாளராக திமுக மாவட்டச்செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டு அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

k

 

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து பூண்டி கலைவாணன் மனு தாக்கல் செய்திருந்தார்.  பூண்டி கலைவாணன் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் 9 பேர் மனு அளித்திருந்தனர்.  திமுக தலைவர் ஸ்டாலின்,  திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் இன்று நடைபெற்ற நேர்காணலுக்கு பின்னர், திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

கடந்த 10 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக உள்ளார் பூண்டி கலைவாணன்.  இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் திருவாரூர் தொகுதி திமுகவினர்.


 

சார்ந்த செய்திகள்