Skip to main content

17 வயது சிறுமி தற்கொலைக்கு யார் காரணம்? சுற்றும் சர்ச்சைகள்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
thiruchy incident.. who is the reason

 

திருச்சி, மணப்பாறை அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

மணப்பாறை, கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஏப்ரல் மாதம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி எங்கள் வீட்டில் யாரும் இல்லாதபோது தன்னுடன் தனிமையில் இருந்த ராம்கி என்பவர், தன்னை ஏமாற்றி விட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஷ்யா சுரேஷிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் மனுவை வாங்க மறுத்துவிட்டார். ஆனாலும் தொடர்ந்து தினமும் நடவடிக்கை எடுக்க சொல்லி மகளிர் காவல்நிலையத்திற்கு அலைந்து கொண்டே இருந்தார். இந்த நிலையில் 1 மாதம் கழித்து மணப்பாறை டி.எஸ்.பி. குத்தாலிங்கத்திடம்  போய் புகார் செய்திருக்கிறார்.

 

thiruchy incident.. who is the reason

 

அப்போது அந்த டி.எஸ்.பியிடம் அதே ஊரை சேர்ந்த இன்னொரு பெண், அந்த ஊரை சேர்ந்த வாலிபர் ஏமாற்றிவிட்டதாக புகார் சொல்ல உடனே டி.எஸ்.பி. குத்தாலிங்கம் வழக்கு பதிய சொல்லி மகளிர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு போட, மகளிர் இன்ஸ்பெக்டர் உடனே க்ரைம் நம்பர் கொடுத்து வழக்கு பதிவு செய்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் ஊர்காரர்கள் அந்த பையனை அழைத்து, அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க உடனே அந்த பெண் வழக்கை வாபஸ் வாங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் ரஷ்யா சுரேஷ் என்ன செய்வது என்று யோசித்து கடைசியில் வேறு வழியில்லாமல், அந்த க்ரைம் நம்பரில் இந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். ராம்கி மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தாலும், இன்ஸ்பெக்டர் ரஷ்யா சுரேஷ் ராம்கியை கைது செய்யாமல் ஏட்டு கஸ்தூரி மூலம் சிறுமியின் கருவை கலைக்க சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கிறார்.

 

thiruchy incident.. who is the reason

 

போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் உயர்நீதிமன்றத்திலே முன்ஜாமீன் கிடைப்பது சிரமம். ஆனால் ராம்கி திருச்சி நீதிமன்றத்திலே ஜாமீன் பெற்றிருக்கிறார்.  இந்த நேரத்தில்தான் 17 வயது சிறுமி இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட, அவன் ஜாமீன் வாங்கிவிட்டான், இனி அவனை எதுவும் செய்ய முடியாது, உன் கருவை நீ கலைத்திருக்க வேண்டியதுதானே என்று சொல்லி திட்டியிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டரின் இந்த பேச்சில் வெறுத்து போன  17வயது சிறுமி தான் விஷம் குடித்து இறந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜாமீன் கிடைத்து மணப்பாறை கோர்டில் ஆஜர் ஆனா ராம்கியை, மணப்பாறை போலீஸ் கைது செய்திருக்கிறது. 17 வயது சிறுமியின் தாய் லெட்சுமி என் மகள் இறப்புக்கு காரணம் ராம்கி என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் மீண்டும் தற்கொலை தூண்டுதல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

5 மாத கர்ப்பிணியான சிறுமி கொடுத்த புகாரில் ராம்கியை கைது செய்து, டி.என்.ஏ. பரிசோதனை செய்திருக்க வேண்டும். சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து திருச்சியில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இதுகுறித்து விசாரித்து சிறுமிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும், இப்படி எதுவுமே நடக்காமல் போனதால் அப்பாவி சிறுமி இனி நியாயம் கிடைக்காது என்று தற்கொலைக்கு முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதற்கிடையில் திருச்சி மணப்பாறை 17 வயது சிறுமி தற்கொலை விவகாரம், வழக்கு பதிவு செய்தவுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருந்தால் சிறுமியின் தற்கொலையை தடுத்திருக்க முடியும். ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன் என் தொடர்ந்து 7 முறையாக, அதிலும் குறிப்பிட்ட ஒரு மண்டலத்தில் 6 வது முறையாக தாமாக முன் வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை துவங்கி, தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.