Skip to main content

தலைவிரித்தாடும் லஞ்சம்..! தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
teachers pro


புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு இன்று மாலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியரியர்கள் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமையில் வந்த ஆசிரியர்கள், திடீரென அதிகாரி குணசேகரன் அறையில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கூறும்போது..

பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் பல அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது. அந்த காலிப்பணியிடங்களை உடனே பதவி உயர்வின் மூலம்  நிரப்ப வேண்டும். அடுத்து இந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் எல்லா வேலைக்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனால் லஞ்ச லாவண்ய போக்கை கண்டித்தும் தான் இந்த போராட்டம் என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .

Next Story

இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்ட இடத்திலே அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டும் மற்றும்  அனைத்து உடல் பரிசோதனை செய்யப்பட்டும் காணப்படுகிறது. உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ள ஆசிரியர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.