Skip to main content

அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

உலகின் பல நாடுகளில், இலட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி பிழைப்புக்காக பல வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கரோனா முடக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

விமான போக்குவரத்தும்  தடை விதித்துள்ளதால் நாடு திரும்பவும் அவர்களால் முடியவில்லை. எனவே வேலையின்றி, சம்பளமின்றி, உணவுக்கும் வழியின்றி அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து பல மாதங்களாக, பல வேளைகளில் பட்டினி கிடக்கின்றனர்.

இந்நிலையில் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்,  வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம்  சார்பில் பல்வேறு நாடுகளில் நேற்று இணைய வழியாகவும், அவரவர் இருக்கின்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்துதல் பேரில் அக்கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழ் அமைப்புகள் இணைய வழியாகவும், அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அவரது இல்லத்திலுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில், முக்கிய நிர்வாகிகள் பதாகையேந்தி, சமூக இடைவெளி கடைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “சில வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற தமிழர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்ப்பதில்லை. மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை. நெருக்கடியான அறைகளில் அடைந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் உயிர் பயத்துடன் நாள்களை கடத்தி வருகின்றனர். இதனால் அயல்நாடுகளில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்துடன் இருக்கின்றனர்.

 

 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

அயல்நாடுகளில் இருந்து கேரளத்திற்கு வருகின்ற விமானங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என கேரள மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு விமானங்கள் வேண்டாம் என தமிழ்நாடு அரசு தடைவிதித்து விட்டது. இதனால் அயல்நாடு வாழ் தமிழர்கள் தாங்க முடியாத வேதனை அடைந்துள்ளனர்.  எனவே அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  மேலும் நெருக்கடி காலத்தில் அவர்களை கட்டணம் இன்றி அழைத்து வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அவர்களுக்கான குவாரண்டைன் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகளை செயல்படுத்த உடனடியாக அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க, தமிழக அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்களை காக்க தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அவரவர் இல்லங்களில் இருந்தபடி போராட்டம் நடத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.