Skip to main content

தமிழகத்தில் ஒரே நாளில் ரூபாய் 292.09 கோடிக்கு மது விற்பனை!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

tamilnadu tasmac sales rs 292 crores sales yesterday

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு இன்று (01/05/2021) முதல் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று (30/04/2021) தமிழகம் முழுவதும் உள்ள 'டாஸ்மாக்' கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நேற்று (30/04/2021) ஒரே நாளில் மட்டும் 'டாஸ்மாக்' கடைகளில் ரூபாய் 292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 63.44 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 59.63 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதேபோல், சேலம் மண்டலத்தில் ரூபாய் 56.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 56.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 56.37 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூபாய் 252 கோடி! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

Tasmac collects Rs 252 crore in a single day!

 

தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 

மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி, இன்று (01/05/2022) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று (30/04/2022) கடைகளில் மதுபாட்டில்களை வாங்கக் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக மதுரையில் ரூபாய் 54.89 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 52.28 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 49.78 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 48.67 கோடிக்கும், கோவையில் ரூபாய் 46.72 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

Next Story

சேலத்தில் திருட்டு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூடல்!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Tasmac liquor stores closed in Salem

 

சேலம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 

 

சேலம் மாவட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அரசின் அனுமதியுடன் பார் எனப்படும் மதுக்கூட வசதி உள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு மதுக்கூட வசதி இல்லை. இந்நிலையில் சேலம் மாநகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஏப். 28- ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அனுமதி பெறாத மதுக்கூடங்கள், அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாத மதுக்கூடங்கள் என மொத்தம் 12 மதுக்கூடங்கள் விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவது தெரிய வந்தது. 

 

இந்த 12 மதுக்கூடங்களும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக மதுக்கூடங்களை நடத்தியதாக அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.