மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் போல உள்ளது இந்த ஆட்சி என அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றியின் மூலம் இந்த ஆட்சி முடிவிற்கு வரும். மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் போல உள்ளது இந்த ஆட்சி. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் வந்துகொண்டிருக்கும் நிலை உள்ளது, இந்த நிலை ஆட்சி முடிவிற்கு வருவதற்கான நிலைதான்.
இந்த மின்வெட்டு ஆட்சியை முடிவிற்கு செல்லும் நிலையை உணர்த்துகிறது. முந்தைய திமுக ஆட்சியை கிண்டல் செய்யும் நிலையில் தான் திமுக ஆட்சிக்கு முடிவிற்கு வந்தது. ஊழல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாமலா நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியது என்றார். குருட்டு அதிர்ஷ்டத்தில் கிடைத்த இந்த ஆட்சியில் கிடைத்ததை சுருட்டிகொள்வோம் என்ற நிலையில் உள்ளது.
எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அரசாக உள்ளது மக்களின் மீது அக்கறை இல்லை, ஊழல்வாதிகளுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை, இடைத்தேர்தலில் வெற்றி உறுதி, நாங்கள் தேர்தலுக்கு தயார் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 3 மாதமாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றத்தில் 7ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் பொதுக்கூட்டமும், 10ஆம் தேதி திருவாரூரில் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஆர்.கே.நகர் போன்று இடைத்தேர்தலில் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் இரண்டாம் இடத்திற்கு தான் ஆளும் கட்சியும் பிரதான கட்சிகளும் போட்டியிடுகின்றன. எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காக சட்டவிரோத மணல் குவாரிகளை வழங்குவதிலயே இந்த அரசு குறியாக உள்ளது.
முறைகேடுகளை முறைப்படுத்தும், லாபம் பார்க்கும் அரசாக உள்ளது இந்த அரசு. ஊழல் தொடர்பாக எதிர்கட்சியான திமுக வழக்கு தொடந்துள்ளதால் நாங்கள் சட்டபோராட்டத்தின் மூலமாக அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் மீட்போம், இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதுதான் எனது பிரதான நோக்கம், எங்களது 18 எம்.எல்.ஏக்களின் எண்ணம் முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் போல உள்ளது இந்த ஆட்சி! - டிடிவி தினகரன்
சார்ந்த செய்திகள்
Next Story
'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்
தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.
இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.
ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.
Next Story
தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.