Skip to main content

“இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

TamilNadu government will be set penny kwik statue in England

 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 இன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து இலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு. சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடி ஒவ்வொரு முறை வரும்போதும் அவரது தவறுகளே நினைவுக்கு வரும்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Every time Modi comes, he remembers his mistakes' - Chief Minister M.K.Stalin Kattam

தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளது. உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது. மற்ற கட்சிகளை ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள பாஜக தான் உண்மையான ஊழல் கட்சி. அமலாக்கதுறையின் சோதனைகளுக்கு ஆளான சில நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமாக பாஜகவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன.

அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நிறுவனங்களிடமிருந்து பல கோடி பறித்துள்ளதால் பாஜக கட்சிதான் ஊழல் கட்சி என மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தி திணிப்பின் போது இரட்டை மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது போல் சி.ஏ.ஏ வை அமல்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக பற்றி பிரதமர் மோடி தவறான தகவல்களை பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்த திட்டங்கள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினால் பாஜகவினர் அதற்கு பதிலளிப்பதில்லை.

வதந்திகளை பரப்பி பாஜகவினர் கவனத்தை திசை திரும்புகின்றனர். ஒன்றிய அரசின் எந்த திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டது என்று கேட்டால் பாஜகவினரிடம் பதில் இல்லை. பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவது பாஜகவினர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் தெரியும். திமுகவில் வாரிசு அரசியல் என்று கூறி பிரச்சனைகளை பாஜகவினர் திசை திரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வாரிசுகள் இடம் பெற்றுள்ளது பற்றி பிரதமர் பதில் கூறுவாரா? பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்ததற்கு பிரதமரின் பதில் என்ன?

தேர்தல் பத்திரம் மூலம் ஊழலையே பாஜக சட்டபூர்வமாக செய்துள்ளது. தேர்தல் பத்திர தில்லுமுல்லுகள் அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடி கிழித்துள்ளது. அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளதால் திமுக அமைச்சர்கள் மீது அரசியல் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை சட்டபூர்வமாக திமுக முறியடிக்கும்.

தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த சாதனைகள் எதுவும் கூற முடியாததால் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் புகழ்ந்துள்ளார். பாஜகவினர் போதை பொருள் பற்றி பேசும் நிலையில் குஜராத்தில் இருந்து தான் அதிக போதை பொருட்கள் வருகின்றன. மோடி ஆட்சியின் 10 ஆண்டு கால தோல்வியால் நாடு முழுவதும் மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் அவரது தவறுகளே மக்கள் நினைவுக்கு வரும். போதை பொருட்களை தடுக்கக்கோரி பழனிசாமி நடத்திய போராட்டம் அரசியல் நாடகம். அதிமுக ஆட்சியில் டிஜிபி மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மும்பை புறப்பட்ட தமிழக முதல்வர்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
The Chief Minister of Tamil Nadu left for Mumbai

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16ம் தேதி மணிப்பூரில் துவங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் நடைபெற்றது, இந்நிலையில் மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று நிறைவு செய்யப்படுகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் இந்த யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சற்று நேரத்திற்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெறவிருக்கும் இந்த யாத்திரை நிறைவு விழா மற்றும் அதனை ஒட்டிய பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.