Skip to main content

மார்ச் 3ல் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
p

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்ககள் சங்க பொதுக்குழு மார்ச் 3ம் தேதி நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.      சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவஜோதி அரங்கில் சங்கத்தின் தலைவர் விஷால் தலைமையில் இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது.                                                

தயாரிப்பாள் சங்க கணக்கு விவரங்களை விரைந்து பொதுக்குழு நடத்தி தாக்கல் செய்யும்படி உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூடுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெளியான செய்தியில் உண்மை இல்லை; இது காலத்தின் கட்டாயம்' -இயக்குனர் பாரதிராஜா!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

DIRECTOR BHARATHYRAJA STATEMENT

 

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

சங்கம் பல்வேறு நபர்களால் பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ்த் திரைப்படங்கள் எந்தவித பிரச்சனையுமின்றி தியேட்டரில் வெளிவர தயாரிப்பாளர் சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுயநலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம். அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் கேட்ட பிறகே முடிவெடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.