Skip to main content

சிங்கள பாடகிக்கு எதிராக சிலிர்க்காத தமிழ்ச் சினிமா! கொந்தளிக்கும் ஈழம்! 

Published on 13/10/2021 | Edited on 14/10/2021

 

Tamil cinema not thrilled against Sinhala singer! Turbulent Eelam!

 

இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் நடிக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். இந்தப் படத்தில் கீர்த்தி திவாரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், சீனியர் நடிகர்கள் பிரபு, நாசர் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கின்றனர். 

 

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களில், மதன் கார்க்கி எழுதிய ஒரு பாடலை இலங்கையைச் சேர்ந்த பாப் இசை பாடகி யோஹானியை அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதுதொடர்பான புகைப்படமும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தால் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள்.

 

பாப் இசை பாடகி யோஹானி, இலங்கை அரசின் சிங்கள ராணுவ தளபதிகளில் ஒருவரான பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார். ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் தமிழர்களைக் கொன்று குவித்ததில் பிரசன்ன டி சில்வாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. சிங்கள இனவெறி அதிகம் இருக்கும் அதிகாரிகளில் சில்வாவும் ஒருவர். 

 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய சில்வா, அதிபர் கோத்தபயாவிற்கு நெருக்கமாக இருந்து இனப்படுகொலைகளை அரங்கேற்றியவர். 

 

இவரைப் போலவே அவரது மகள் யோஹானியும் சிங்கள இனவெறி அதிகமுள்ளவர். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய யுத்தத்தைப் புகழ்ந்து பாடியவர் யோஹானி. அப்படிப்பட்ட அந்தப் பாடகியை தமிழ்ச் சினிமாவில் பாட வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொச்சைப்படுத்தும் செயல் என்று ஈழத்தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது. 

 

தமிழ்ச் சினிமாவிலும் தமிழ்த் தேசியவாதிகளிடமிருந்தும், இதுகுறித்து எந்த எதிர்ப்பும் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறது ஈழத் தமிழினம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.