Skip to main content

மகனை இழந்த சோகத்தை கடைசிவரை மறக்கவில்லை... மறைந்த இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

 The tragedy of losing a son has not been forgotten till last ... The late director RNR Manohar!

 

 

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட ஆர்.என்.ஆர். மனோகர் இன்று (17.11.2021) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மிருதன்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆர்.என்.ஆர். மனோகர் சென்னையில் உள்ள தன் வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 

 The tragedy of losing a son has not been forgotten till last ... The late director RNR Manohar!

 

அண்மையில் கரோனா ஊரடங்கின்போது சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அதேபள்ளியில் படித்த ஆர்.என்.ஆர். மனோகரின் மகன் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நீச்சல் குளத்தில் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

2012ஆம் ஆண்டு, அப்பள்ளி வளாகத்தில் ஆர்.என்.ஆர். மனோகரின் மகன் நீச்சல் பயிற்சியாளர் முன்னிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் 22 மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது டீ குடிப்பதற்காக நீச்சல் பயிற்சியாளர் வெளியில் சென்றுவிட்டதாகவும், அதுசமயம் ஆர்.என்.ஆர். மனோகரின் மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தைப் பற்றி மனோகர் குறிப்பிடுகையில், ''பயிற்சியாளர் பயிற்சி நேரத்தின்போது அவ்விடத்தில் இல்லாததினால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது'' எனக் குற்றம்சாட்டியிருந்தார். ஆனாலும் பல முக்கிய பிரமுகர்கள் இதில் தலையிட்டு இந்தப் பள்ளி நிர்வாகத்தினைக் காப்பாற்றினார்கள் என தகவல்கள் வெளியாகின. 

 

மகனை இழந்த எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர். மனோகர் திடீரென்று உயிரிழந்தது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.