Skip to main content

தினகரன் அதிகமாக ஆட்டம் போடுகிறார்! சிறையில் கொந்தளித்த சசிகலா! பெங்களூரு சிறை நிலவரங்கள்!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
sasikala



செந்தில் பாலாஜி கட்சி மாறியது பற்றி சிறையில் இளவரசியிடம் பேசிய சசிகலா, தினகரனைப் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
 

''தினகரன் ரொம்ப ஓவராக ஆட்டம் போடுகிறான். அதனால்தான், செந்தில் பாலாஜி அவனை விட்டு விலகியுள்ளார். திமுகவில் சேர்ந்துள்ளார்'' என சொன்ன சசிகலா, அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். செந்தில் பாலாஜி தினகரனுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளார். செந்தில் பாலாஜிக்கும் சேலஞ்சர் துரை என்பவருக்கும் ஆகாது. அந்த சேலஞ்சர் துரை சமீபத்தில் ஒரு டெம்போ டிராவலர் ஒன்றை தினகரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். 

 

அந்த டெம்போ டிராவலரில் சேலஞ்சர் துரை ஏறிக்கொள்கிறார். வேறு யாரையும் அதில் ஏற அனுமதிப்பதில்லை. சமீபத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்க்க சென்ற தினகரனின் டெம்போ டிராவலரில் ஏற அந்த பகுதியில் மிகப் பிரபலமான குடவாசல் ராஜேந்திரன் முயற்சித்துள்ளார். அவரை சேலஞ்சர் துரை ஏற அனுமதிக்கவில்லை. அதனால் கடுப்பான குடவாசல் ராஜேந்திரன் மண்ணை வாரி தூற்றி சேலஞ்சர் துரையையும், தினகரனையும் திட்டியுள்ளார். 

 

தினகரனுக்காக உழைத்தவர்களையெல்லாம் இப்படி காயப்படுத்திறீங்களே? நீங்க நல்லா இருப்பீங்களா? என்று குடவாசல் ரஜேந்திரன் சாபமிட்டது சசிகலாவின் காதுகளுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்ட சசிகலா, தினகரன் ஆட்டம் ஓவராக இருக்கிறது என்று தனது கோபத்தை பதிவு செய்துள்ளார். 

 

அத்துடன் இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோரையும் தினகரன் மதிப்பதில்லை என இளவரசியும் தன் பங்குக்கு தினகரன் பற்றி கோபப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கும், துணைப் பொதுச்செயலாளரான தினகரனுக்கும் இடையே ஒரு பெரிய பணிப்போர் நிலவுவதாக அமமுக வட்டாரங்களும், பெங்களுரு சிறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

பெங்களூர் சம்பவம்; மண்ணடியில் என்.ஐ.ஏ. சோதனை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Bangalore Incident; NIA raids mannadi

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில், அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை தற்போது சோதனை நடத்தி வருகிறது. பெங்களூர் வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியிருந்ததாக முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், மண்ணடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.