Skip to main content

விஷாலிடம் ஒருகோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 14/02/2018 | Edited on 15/02/2018

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் ‘கங்காரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்த சமயத்தில் இருந்தே விஷாலுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் சமூக வலைதளங்களிலும் விஷாலை நேரடியாக எதிர்த்து எழுதி வருபவர். இந்நிலையில், தான் தயாரித்து இயக்கி வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் கதையை வெளியிட்டு விஷால் தரப்பு தன்னை வியாபாரா ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது என்றும், அதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் விஷால் தரப்பிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

‘தயாரிப்பாளர் தேர்தலில் விஷால் தரப்பிற்கு எதிராக நின்றதனால் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் என்மேல் வன்மம் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றிய பல தவறான தகவல்களை திரையுலகில் பரப்பி வருகின்றனர். சென்ற வருடம் நான் உட்பட 107 தயாரிப்பாளர்களின் பெயர்களை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கினார்கள். அடுத்து நடைபெற்ற சங்க கூட்டத்தில் சங்கத்தின் பெயரில் வாங்கப்பட்ட 4 கோடி ரூபாய் கடனைப் பற்றி நான் கேள்வியெழுப்பியபோது சரிவர பதில் சொல்லாமல் வெளியேறினார்கள். வெளியேறும்போது விஷால் நேரடியாக என்னை திரையுலகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன் என்று சவால் விட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு நான் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படம் வெளியாவதைப் பற்றி அறிவித்திருந்தேன். அதிலிருந்து என்னைப் பற்றியும் எனது படத்தையும் தவறான நோக்கத்தில் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்கள். மேலும் எனது படத்தின் கதையையும் வாட்சாப் க்ரூப்களில் வெளியிட்டு வருகிறார்கள். இது எனது படத்தின் வியாபாரத்தை பெரிதாக பாதித்துள்ளது.

மனதளவிலும் வியாபாரத்திலும் பெரும் பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ஏற்கனவே என் மேல் இருக்கும் கோபத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள். ஒரு திரைப்படத்தின் கதையை வெளியாகும் முன்னே லீக் செய்வது அந்த படத்திற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு தயாரிப்பாளருக்கு நன்கு தெரியும். தயாரிப்பாளராய் இருந்துகொண்டு, அதுவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துகொண்டு விஷால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. இது ஒரு குழந்தையை சிசுவிலேயே கொல்வதற்கு சமம்’ என்றார் வேதனையுடன்.

நடிகர் விஷால், விஷால் ஃப்லிம் ஃபேக்டரியின் மேனேஜர் ராஜசேகர் மற்றும் அனைத்திந்திய புரட்சித் தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஹரிஹரன் ஆகிய மூன்று பேருக்கு இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

2026 ஆம் ஆண்டில் புதிய கட்சி; நடிகர் விஷால் அறிவிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Actor Vishal announced that he will start a new party in 2026

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடத்துக்கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்; மக்களுக்கு போதுமான வசதியில்லை என்று கூறிய விஷால், அதன் காரணமாகவே தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டில் நடக்கும் சட்ட மன்ற தேர்தலில் களம் காணப்போவதாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.