Skip to main content

கோடைவெயிலின் கோரப்பிடியில் கோடியக்கரை:தண்ணீருக்கு ஏங்கும் விலங்குகள்!

Published on 12/05/2019 | Edited on 14/05/2019

கோடைவெயிலின் தாக்கம் கோடியக்கரை வனவிலங்குகளையும் விட்டுவைத்திடவில்லை. வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து, வனவிலங்குகள் தண்ணீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

The summer that does not leave the Kotakakar wildlife

 

நாகை மாவட்டம், வங்ககடலோரம் உள்ள வேதாரன்யம் கோடியக்கரையில் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி என பல்வேறு வனவிலங்குகள் இருக்கின்றன. அங்கு தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலையே உறுவாகியுள்ளது. இந்த சரணாலயத்தில் 56 இடங்களில் இயற்கையான குளங்களும், சிமெண்டால் செயற்கையாக 17 இடங்களில் கட்டப்பட்ட தொட்டிகளும் உள்ளன. இருந்தபோதிலும் வனத்துறை அதிகாரிகள் கடமைக்கும், கணக்கிற்கும் தினசரி ஒரு டேங்கர் தண்ணீர் கொண்டுவந்து தொட்டிகளில் விடுகின்றனர்.

 

The summer that does not leave the Kodiyakkarai wildlife

 

இதுகுறித்து கோடியக்கரை சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், " வழக்கமாக இந்த காட்டுப் பகுதியில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 120 சென்டிமீட்டர் மழை பெய்யும். ஆனால் சென்ற ஆண்டைவிட மிக மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் தற்போது குளங்கள் வறண்டுவிட்டன. வழக்கமாக கத்திரி வெயில் சீசன் சமயங்களில் தான் வனப் பகுதியில் உள்ள குளங்கள் வறண்டுபோகும், ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை குறைவு மற்றும் கடும் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நண்டு பள்ளம், அழுகண்ணி,  இரட்டை வாய்க்கால் நல்ல தண்ணீர் குளம், புதுக்குளம் உள்ளிட்ட 58 குளங்களிலும் தரிசு பகுதிகளிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி கூடிவிட்டது.

 

The summer that does not leave the Kodiyakkarai wildlife

 

வனத்துறையின் மூலம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றினாலும் அது வனவிலங்குகளுக்கு போதுமானதாக இல்லை. மழை பெய்தால்தான் வன விலங்குகள் சரணாலயம் பொலிவு பெறும். அதோடு கஜாபுயலின் கோரதாண்டவத்தால் காடுகளில் இருந்த மரங்களும் முறிந்து சிதிலமடைந்து, ஈரத்தன்மையை இழந்து நிற்கின்றன. புயலுக்கு பிறகு மழையே பொழியல, கோடை மழையும் பெய்யல, அதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, வாய்பேசும் மனிதனே தவிக்கும் நிலமையை யாரும் கண்டுக்கல, வாயில்லா காட்டு விலங்குகளுக்கா முக்கியத்தும் கொடுப்பாங்க. அரசு முன்வந்து அனைத்து குளங்களையும் தண்ணீர் நிறப்பனும்," என்கிறார்.

 

 

கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு கடும் வெப்பத்தினால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

கோடை காலத்தில் அரைநாள் விடுப்பு; அதிரடி அறிவிப்பு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Action Notification on Half day leave during summer in telangana

நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. 

கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.