Skip to main content

பார்க்க விரும்பல... போக சொல்லு... கழட்டிவிட்ட காதலி வீட்டு முன்பு வாலிபர் தற்கொலை

Published on 31/07/2018 | Edited on 31/07/2018


 

Suicide


பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு, திடீரென கள்ளக்காதலி கழட்டிவிட்டதால் அவரது வீட்டு முன்பு வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

 

சென்னை அருகே திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் முருகன். 35 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து அதே பகுதியில் குடியிருந்து வந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

 

 

 

இவர்களின் கூடா நட்பு விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து, அப்பெண்ணின் வீட்டார் அவரை நாகர் கோவிலுக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். அப்பெண்ணை பார்க்க முடியாமல் தவித்து வந்த முருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு சென்றார். அங்கு அப்பெண் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து அவருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் முருகனை பார்க்க விரும்பவில்லை. 

 

 

 

தொடர்ந்து முயற்சி செய்தும் பேச முடியாமல் தவித்தார் முருகன். அவரை பார்க்க விரும்பல, இங்கிருந்து போக சொல்லுங்க என்று உறவினர்களிடம் கூறி முருகனிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த முருகன், அப்பெண்ணின் வீட்டின் முன்பே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை ஆசாரிபள்றளம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிசிக்கை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் உயிரிழந்த உயிர் நண்பன்; அதே இடத்தில் இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
A friend who lose in live in an accident; A pathetic decision taken by the youth at the same place

உடன் வந்த உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்த இளைஞர் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர்-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது நல்கிடா என்ற பகுதி. அங்கு சாலை ஓரத்திலிருந்த மரத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அருகில் இருந்த ராஜ்கட் காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் ஜபூவா மாவட்டத்தைச் சேர்ந்த கண்டிசிங் என தெரிய வந்தது. அவருடைய மொபைல் போனை எடுத்து ஆராய்ந்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார்.

அந்த வீடியோவில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டி சிங் அவருடைய நண்பர் நௌசிங் உடன் இந்தூர்-அகமதாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நௌசிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்னுடைய உயர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததைத் தாங்க முடியாத கண்டி சிங் அதே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.