Skip to main content

திடீரென நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று மணமக்களை வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

Suddenly the minister went to the apartment and greeted the bride and groom!

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் - கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் பிரமாண்ட ராஜகோபுரத்துடன் திருப்பணி கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிலையில், வைகாசி 26 ந் தேதி குடமுழுக்கு செய்ய நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலை கோயிலுக்குச் சென்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்களிடம் ரூ.30 லட்சம் திருப்பணிக்காக நிதி வழங்கினார்.

 

Suddenly the minister went to the apartment and greeted the bride and groom!

 

செரியலூர் - கரம்பக்காடு கோவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்ற போது கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் (நரிக்குறவர் குடியிருப்பு ) ஒரு திருமணத்திற்காக மைக்செட் பாடியதோடு, பந்தல் போடப்பட்டு பதாகையும் வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற அமைச்சர் மெய்யநாதன திடீரென அந்த குடியிருப்புக்குள் சென்று மணமக்களை அழைத்து வாழ்த்தியதுடன் பரிசும் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டு உடனே குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

 

'நாங்கள் அழைப்பிதழ் கொடுக்காமலேயே அவர் படம் போட்டு பதாகை வைத்திருந்தோம். ஆனால் அமைச்சர் மெய்யநாதன் எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் மணமக்களை வாழ்த்தி எங்கள் மக்களின் குறைகளைக் கேட்டது ரொம்ப சந்தோசமா இருக்கிறது'' என்றனர் அப்பகுதி மக்கள். அமைச்சருடன் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.