Skip to main content

"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

sudden worst incident by rowdies in perambalur

 

பெரம்பலூர் பாலக்கரையில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை, 6 பேர் கொண்ட கும்பல் கட்டை மற்றும் குச்சியால் சராமரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகச் சாலையில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக வேலைபார்த்து வருபவர் அத்தியூரைச் சேர்ந்த கருணாநிதி மகன் அருண் (வயது 20). இவர், அவரது சூப்பர்வைசர் கார்த்திக் என்பவருடன் பாலக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த வினோத், மணிகண்டன் ஆகிய இருவரும் பைக்கில் வந்த அருணை மடக்கி 'நெடுவாசலா?' எனக் கேட்டு, பைக்கின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்போது, அருகில் இருந்த சிற்றுண்டிக் கடை முன்பு கிடந்த கட்டையை எடுத்து சராமரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலை தாங்கமுடியாத அருண் தப்பிப்பதற்காக ஓடினார். அப்போதும், அவர்கள் அருணை விடாமல் தாக்கியுள்ளனர்.

 

பின்னர், அங்கிருந்த மக்கள் இதுகுறித்து போலீசுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். விரைந்துவந்த போலீசார், வினோத்தை மடக்கிப் பிடித்து, வேனில் ஏற்றிச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், “மாலை 3 மணிக்கு நெடுவாசலில் ஒருவரை தாக்கிவிட்டு வந்தோம். அவர்களின் உறவினர்கள்தான் எங்களைத் தாக்க வருகிறார்கள் என நினைத்து ஓட்டல் ஊழியரை தாக்கிவிட்டோம்" எனத் தெரிவித்தார். வினோத், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் ரவுடிப் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருப்பதும் பின்னர் தெரியவந்தது. புதிய வரவாக இணைந்துள்ள 4 புதிய ரவுடிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.