“செயற்கையாக, சவால்விடும் தொனியில் பொய்பொய்யாகப் பேசிவரும் அரசியல் தலைவர்களை டிவி ஸ்க்ரீனில் பார்க்கும்போது, என்னையும் அறியாமல் டென்ஷன் ஆகி, ரத்த அழுத்தம் கூடிவிடுகிறது.” என்றார் அந்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர். ‘இதையெல்லாம் சகித்துக்கொள்ளவில்லை என்றால், தங்களின் உடல்நலம்தானே கெடும்? பிடிக்காத விஷயத்தை மனதுக்குள் கொண்டு செல்லாதீர்கள். கடந்துவிடுங்கள்.’ என்றபோது, “அடப் போங்க தம்பி, அரசியல் தலைவர்களுக்கு இல்லையென்றாலும், நாட்டு நலன் குறித்த அக்கறை எனக்கு இருக்கிறதே?” என்றார் பொறுப்புணர்வுடன்.
ஆசிரியரை டென்ஷன் ஆக்கியவர் யார் தெரியுமா? நமது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ‘அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த யார் நினைத்தாலும் எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.’ என்று அவர் ஸ்டேட்மெண்ட் விட்டதுதான் அவருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த ஆசிரியர் –
“அன்றைய அதிமுக தலைமை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை தொடங்கி, ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்து தண்டனை பெற்றதுவரை, அத்தனையுமே கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம்தான். எதிர்த்தாரா இந்தப் பன்னீர்செல்வம்? சரி, இவராவது நேர்மையே உயிர்மூச்சு என்று வாழ்பவரா? என்று பார்த்தால், அதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில், ஓ.பி.எஸ். உட்பட அமைச்சரவையில் உள்ள பலர் மீதும் எந்தப்பக்கம் பார்த்தாலும், குற்றச்சாட்டுக்களும் வழக்குகளுமாக உள்ளன. குட்கா ஊழல் நாறிக்கொண்டிருக்கிறதே? சம்பந்தப்பட்டவர்களை ஓ.பி.எஸ். ஒன்றும் எதிர்க்கவில்லையே? ஒருவேளை, இப்படி நினைக்கிறாரோ? நாங்கள் ஊழல் செய்வோம்; சொத்துக்களைக் குவிப்போம்; வழக்குகளையும் சந்திப்போம். ஆனால், இதுகுறித்து வேறு எந்த அரசியல் தலைவரும் யாரும் வாய்திறக்கவே கூடாது. அப்படி பேசுவது, அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயல். இதைத்தான் எதிர்க்கிறாரோ?
ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து, தர்மயுத்தம் என்று ‘பில்ட்-அப்’ தந்து ‘அமைச்சரவையில் உங்களோடு நானும் ஒட்டிக்கொள்கிறேன்; துணை முதல்வர் பதவியாவது தந்துவிடுங்கள்’ என்று ‘டிமாண்ட்’ வைத்து, துணை முதல்வர் ஆனவர் அல்லவா ஓ.பன்னீர்செல்வம்? தங்களைக் காட்டிலும் அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் யார்? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.” என்றார் சீரியஸாக.
தியாக உள்ளம் கொண்ட நல்ல தலைவர்களை வரலாறு போற்றுகிறது. ஊழல் செய்து, சொத்துக்களைக் குவிப்பதற்காகவே அரசியலில் வேரூன்றி உள்ள இன்றைய தலைவர்களை ……………………………………. கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும்.
அதிமுக ஆட்சிக்கு களங்கம்! - ஓ.பி.எஸ். ஆத்திரம்!
சார்ந்த செய்திகள்
Next Story
அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.