Skip to main content

தமிழகத்தில் மட்டும் 63 டாக்டர்கள் பலி...! இந்திய மருத்துவ கவுன்சில் மாநில தலைவர் பேட்டி!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020
State President of the Medical Council of India

 

 

கரோனாவால் உயிரிழந்த டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணதொகையை இதுவரை வழங்கவில்லை என இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ எம் ஏ) மாநில தலைவர் சி.என்.ராஜா  அரசுகள் மீது குற்றச்சாட்டினை வைத்துள்ளார். 

 

ஈரோடு  பழையபாளையம் அருகே இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு என சிகிச்சை அளிக்க கரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக  ஐஎம்ஏ மாநில தலைவர் சி.என்.ராஜா பங்கேற்று அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். 

 

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாக்டர்களும் இணைந்து கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையை தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் வழிகாட்டுதலின் படி அனைத்து வசதிகளும்  இங்கு செய்யப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை  மட்டும் இங்கு வசூலிக்க இருக்கிறோம். ஏராளமான டாக்டர்களும், செவிலியர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை நாங்கள் துவங்கி உள்ளோம்.

 

நாடு முழுவதும் இதுவரை 370 டாக்டர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 63 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என  நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் பிரதமரும்,  தமிழகத்தின் முதல்வரும் அறிவித்த நிவாரணத் தொகையை இதுவரை வழங்கவே இல்லை. அரசு அறிவித்த நிவாரணதொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

 

மேலும் இந்த தொற்றால் உயிரிழந்த டாக்டர்களுக்கு அரசு ராணுவ வீரர்களுக்கு மரியாதை வழங்குவதை போல் உரிய மரியாதயை அவசியம் செய்ய வேண்டும் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது தேவையற்றது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் நிலை குலைந்து போய்விட்டது. பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் இதை மேலும் அரசு வலுப்படுத்த வேண்டும். கரோனோ  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் போதுமானதாக இல்லை. அந்த கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.