Skip to main content

தமிழகத்தில் மட்டும் 63 டாக்டர்கள் பலி...! இந்திய மருத்துவ கவுன்சில் மாநில தலைவர் பேட்டி!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020
State President of the Medical Council of India

 

 

கரோனாவால் உயிரிழந்த டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணதொகையை இதுவரை வழங்கவில்லை என இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ எம் ஏ) மாநில தலைவர் சி.என்.ராஜா  அரசுகள் மீது குற்றச்சாட்டினை வைத்துள்ளார். 

 

ஈரோடு  பழையபாளையம் அருகே இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு என சிகிச்சை அளிக்க கரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக  ஐஎம்ஏ மாநில தலைவர் சி.என்.ராஜா பங்கேற்று அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். 

 

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாக்டர்களும் இணைந்து கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையை தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் வழிகாட்டுதலின் படி அனைத்து வசதிகளும்  இங்கு செய்யப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை  மட்டும் இங்கு வசூலிக்க இருக்கிறோம். ஏராளமான டாக்டர்களும், செவிலியர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை நாங்கள் துவங்கி உள்ளோம்.

 

நாடு முழுவதும் இதுவரை 370 டாக்டர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 63 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என  நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் பிரதமரும்,  தமிழகத்தின் முதல்வரும் அறிவித்த நிவாரணத் தொகையை இதுவரை வழங்கவே இல்லை. அரசு அறிவித்த நிவாரணதொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

 

மேலும் இந்த தொற்றால் உயிரிழந்த டாக்டர்களுக்கு அரசு ராணுவ வீரர்களுக்கு மரியாதை வழங்குவதை போல் உரிய மரியாதயை அவசியம் செய்ய வேண்டும் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது தேவையற்றது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் நிலை குலைந்து போய்விட்டது. பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் இதை மேலும் அரசு வலுப்படுத்த வேண்டும். கரோனோ  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் போதுமானதாக இல்லை. அந்த கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.