Skip to main content

இந்த அரசு இயற்கை வளங்களை அழித்து வருகிறது! - அன்புமணி குற்றச்சாட்டு!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
anbumani


வைகையைக் காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு வைகை ஆறு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் இறங்கியுள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இந்த விழிப்பு உணர்வு பிரசாரத்தின் துவக்க நிகழ்வாக வைகை ஆறு உருவாகும் இடமான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலையின் அடிவாரமான வாலிப்பாறைக்குச் சென்று அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்ளிடம் பேசிய அன்புமணியோ...
 

anbumani


இந்த மேகமலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக மரம் வெட்டப்பட்டதால் வறட்சி ஏற்பட்டு வைகை ஆற்றுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனது எனவே மேகமலை வன உயிரினக் காப்பகத்தைப் புலிகள் சரணாலயமாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும்போது மரம் வெட்டுவதும் மரக்கடத்தலும் வனத்துக்குள் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும். தமிழக அரசு இயற்கை வளங்களை அழித்துக்கொண்டு இருக்கின்றது. திருச்சி முக்கொம்பு பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்றதாலே ஷட்டர் மற்றும் பாலம் பகுதிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
 

anbumani


கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதுதான் காரணம் என கேரளா அரசும் கேரள அரசியல்வாதிகளும் பொய் பிரச்சாரம் பரப்பி வருகின்றனர். அதற்கு தமிழக அரசு எந்த ஒரு பதிலும் கூறாமல் இருக்கின்றது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைத் தமிழக அரசு 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
 

anbumani


அதன்பின் அப்பகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த அன்புமணி ராமதாஸ் அந்த மக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார். அதன் பிறகு அங்கிருந்து தனது பிரசார பயணத்தைத் தொடங்கியவர் வைகை ஆறு பயணிக்கும் பாதைகளான வருசநாடு, மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வழியாக வைகை அணைக்குச் சென்று அணையைப் பார்வையிட்டார் அதன் பின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு மறுநாள் 2ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு விரகனூர், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக வைகை ஆறு, தனது பயணத்தை நிறைவு செய்யும் இடமான ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.