Skip to main content

கடை முன்பு பைக் நிறுத்தக் கூடாது என்பதற்காக குத்திக்கொலை!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Stabbed with knife not park bike front shop

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரம் சரம் காவல் நிலைய பகுதியில் உள்ள புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது நாராயணசாமி. இவர் கொங்க ராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வாடகை பாத்திரக்கடை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அதே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு(30) என்பவர் நேற்று(26.5.2022) காலை நாராயணசாமி வாடகை பாத்திரக்கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது நாராயணசாமி கடைக்கு வருபவர்களுக்கு இடையூராக உள்ளது என்றும், அதனால் இரு சக்கர வாகனத்தை எடுத்து வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி உள்ளனர்.

 

இந்த நிலையில் அன்று இரவு சுமார் 8 மணி அளவில் கடையை மூடிவிட்டு நாராயணசாமி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது வீட்டிற்கு கடும் கோபத்துடன் சென்ற ராமு நாராயணசாமியை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து தகராறு செய்துள்ளார். அப்போது ராமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  நாராயணசாமியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த நாராயணசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாராயணசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

 

இதையடுத்து ஆத்திரமடைந்த நாராயணசாமியின் உறவினர்கள் கொலை செய்த ராமுவை உடனடியாக கைது செய்யக்கோரி புது உச்சிமேடு பஸ் நிறுத்தத்தில் இரவு 10 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கொலையாளியை விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ராமுவை தீவிரமாக தேடி வருகின்றனர். கடைக்கு முன்பு பைக்கை நிறுத்த கூடாது என்றது சின்ன பிரச்சனை ஒரு கொலையில் முடிந்துள்ளது இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.