Skip to main content

காவலர் கன்னத்தில் அறைந்த எஸ்பி! உயரதிகாரிகளின் மிரட்டலால் புகாரை வாபஸ் பெற்றாரா?

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

SP who slapped the guard on the cheek! Did he withdraw the complaint due to intimidation by higher authorities?

 

சேலம் அருகே, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி, ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனத்தைப் பிடிக்காத காவலரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பி மீதான புகாரை வாபஸ் பெறும்படி அந்தக் காவலர் மிரட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி பாலாஜி. இவர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து ஆக. 7ம் தேதி ஆய்வு செய்தார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் கிளம்பினார். சேலத்தை அடுத்த காகாபாளையம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தார்.

 

அதை கவனித்துவிட்ட எஸ்பி பாலாஜி, இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் விரட்டிச் சென்றார். அப்போது, காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டலாம்பட்டி ரோந்து வாகன சிறப்பு எஸ்ஐ அந்தோணி, ஓட்டுநர் சிவகுமார் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

ரேஷன் அரிசி கடத்தியவர், வாகனத் தணிக்கையின்போது சிக்கிக் கொள்வோம் என பயந்து, அங்குள்ள மண் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றார். அப்போது எஸ்பி பாலாஜி, ரோந்து வாகன ஓட்டுநரான காவலர் சிவகுமாரிடம் ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடிக்கும்படி கூறினார்.

 

அப்போது அவர், வாகனத்தை துரத்திப் பிடித்தால் அவர்கள் தாக்குவார்கள் என தெரிவித்ததோடு, வாகனத்தை பிடிக்கச் செல்லாமல் அங்கேயே நின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்பி பாலாஜி, ரோந்து வாகனத்தை ஓட்டுநர் சிவகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

 

இந்த களேபரத்தில், ரேஷன் அரிசி கடத்திய நபர், தப்பிச் சென்றுவிட்டார்.

 

இதற்கிடையே, காவலரை எஸ்பி அறைந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

காவலர் சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சேலம் மாநகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். அப்போது சிவகுமார், தன்னை அறைந்த எஸ்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்தின் பரபரப்பு சற்று அடங்கியது.

 

என்றாலும், பாதிக்கப்பட்ட காவலர் முதலில் எஸ்பி மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்ததாகவும், பின்னர் அவர் மிரட்டப்பட்டதால் புகாரை திரும்பப் பெற்றதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேநேரம், சம்பந்தப்பட்ட எஸ்பியே அந்தக் காவலரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதன்பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என்று காவலர் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.

 

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு காவலரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு காவல்துறை வட்டாரத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.