Skip to main content

எஸ்.பி. சீனிவாசனின் அதிரடி நடவடிக்கை! சகஜ நிலைக்கு திரும்பிய மக்கள்!!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

S.P. Srinivasan's action People who have returned to normal

 

திண்டுக்கல்லில் எஸ்.பி. முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த 22ஆம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவியையும், அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபனையும் இரண்டு கொலைகார கும்பல் கொடூரமாக கொலை செய்து, அவர்களுடைய தலைகளை வெட்டி வீசிவிட்டுச் சென்றனர். அதைக் கண்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்தக் கொலைகாரக் கும்பலைப் பிடிக்க எஸ்.பி. சீனிவாசன் ஆறு தனிப்படைகள் அமைத்து, தானும் அதிரடி நடவடிக்கையில் இறங்கி குற்றவாளிகளையும் பிடித்து சிறையில் கம்பி எண்ண வைத்தார்.

 

அதன் எதிரொலியாக மக்களும் பெரும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து மாவட்ட அளவில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபடவும் உத்தரவிட்டார். அதேபோல் தானும் இரவு - பகல் பாராமல் வாகன சோதனைகளிலும்  நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்வதுடன் மட்டுமல்லாமல், கடைகள் முன்பாக தேவையில்லாமல் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கடைக்காரர்களிடமும் வலியுறுத்திவருகிறார். அதேபோல், பேகம்பூர் பாரைப்பட்டி, நாகல்நகர், கடைவீதி, பழனிரோடு உள்பட சில பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. சீனிவாசன், அவ்வழியாக வந்த பேருந்துகளையும் தடுத்து நிறுத்தி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

 

S.P. Srinivasan's action People who have returned to normal

 

அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைக் கண்டு, முகக்கவசம் அணியச் சொல்லி வலியுறுத்தினார். அதேபோல் தேவையில்லாமல் கூட்டம் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துவருகிறார். இப்படி கடந்த ஒரு வாரமாக எஸ்.பி. முதல் டி.எஸ்.பி.கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப். இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் அனைவரும் இரவு - பகல் பாராமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதைக் கண்டு பொது மக்களும் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜ நிலைக்குத் திரும்பிவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.