Skip to main content

ஊரடங்கிற்கு  நடுவிலும் பரபரப்பு..!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Some private companies asking their employees to come to office


கரோனாவைக் கட்டுப்படுத்த 10-ந் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதில் முக்கியமான அரசுத்துறை அலுவல்கங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியத்துக்கு உதவும் சிறுகடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை திறந்திருக்கலாம் என்று விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்  அரசு ஆணை எண். 348 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவிப்பின் படி,  அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம், மருந்து நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களும் கூட செயல்படலாம் என்கிறது அதிகாரிகள் தரப்பு.  இதை சாதகமாக எடுத்துக்கொண்ட தோல் பொருள் நிறுவனங்கள், இரும்பு உதிரிபாகத் தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள்  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள், சென்னை, வேலூர் உட்பட, தமிழகம் முழுக்க ஊரடங்கிலும் இயங்கி வருகின்றன. குறிப்பாக சென்னை  அம்பத்தூர், கிண்டி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குவதைப் பார்க்கமுடிகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோல் பெருமளவில் இயங்கும் நிறுவனங்கள்,  தங்கள்  ஊழியர்களை வலுக்கட்டாயமாக  தொழிற்சாலைகளுக்கு அழைப்படுவதால்,  தொழிலாளர்கள் தரப்பு அலுவலகம் செல்லப் படாதபாடு படுகின்றனர். அவர்கள் காவல்துறையினரின் விசாரணைகளையும் எதிர்கொள்கின்றனர். 

 

 ஊரடங்கைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தொழிற்பேட்டைப் பகுதிகளில் அதிக நடமாட்டத்தையும் , தொற்று பரவலுக்கான சூழலையும் பார்க்க முடிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.