Skip to main content

'விஜயகாந்த் குறித்து அவதூறு...'-யூடியூப் சேனல்கள் மீது பார்த்தசாரதி புகார்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

 'Slander about Vijaykanth ...' - Parthasarathy complains on YouTube channels!

 

தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளைப் பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 21/06/2022 அன்று மாலை தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்' என கூறப்பட்டிருந்தது. விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என பல பிரபலங்களும் தங்களது விருப்பங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் சில யூடியூப் சேனல்களில்  விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் வெளியாகி இருந்தன.

 

 'Slander about Vijaykanth ...' - Parthasarathy complains on YouTube channels!

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி பேசுகையில், ''டிடி இன்ஃபோ  என்ற யூடியூப் சேனலும், ஆர்ஆர் நியூஸ் என்ற யூடியூப் சேனலும் விஜயகாந்த் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் எதிரொலித்து, தேமுதிக தொண்டர்கள் என்னிடத்திலும், தலைமை கழக நிர்வாகிகளையும் கைபேசியில் தொடர்பு கொண்டு 'என்ன ஆச்சு என்ன ஆச்சு' என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களை எல்லாம் நாங்கள் சமாதானப்படுத்தி, அமைதிப்படுத்தி அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னோம். நேற்று இரவு விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். தவறான செய்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.