Skip to main content

மகளிர் எஸ்.ஐ-யை மிரட்டிய அமைச்சரின் உதவியாளர்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

சாதாரன குடும்ப பிரச்சனை வழக்கு ஒன்றில், தங்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொள்ளவேண்டுமென அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்த எஸ்.ஐ. முதற்கொண்டு அனைத்துப் போலீஸாரையும் அதட்டி, மிரட்டிள்ளார் தமிழக வணிகவரித் துறை அமைச்சரான கே.சி வீரமணியின் உதவியாளர் ஒருவர்.

 

m

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் திவ்யலெட்சுமிக்கும், கீழப்பூங்குடியை சேர்ந்த குமரேஷிற்கும் 14/11/18 அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் சென்னையில் வசிக்க நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று,  "தன்னுடைய கணவர் வீட்டார் ரூ.10 லட்சம் வரதட்சனையாக வாங்கி வரவேண்டுமென வற்புறுத்துகின்றனர்." என திவ்யலெட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, இருதரப்பினையும் அழைத்து புகாரின் மீதான விசாரணையை தொடங்கியுள்ளது எஸ்.ஐ.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார்.

 

p

 

இவ்வேளையில், தமிழக வணிகவரித் துறை அமைச்சரான கே.சி வீரமணியின் உதவியாளர் எனக் கூறிக்கொண்டு வசந்தகுமார் என்பவர், " எதுக்கு விசாரணை.? உடனடியாக எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தூக்கி வையுங்க.! எஸ்.பிக்கிட்டே பேசியாச்சு.. செய்ய வேண்டுமென்றால் எஸ்.பி.யை பேச சொல்லவா.?" என அதட்டி மிரட்டியதோடு அல்லாமல், "இன்னென்ன பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்யுங்க." என சவுண்ட் விட, மகளிர் காவல் நிலையமே அல்லோகலப்பட, வேறு வழியில்லாமல் அமைச்சரின் உதவியாளர் கூறிய பிரிவுகளிலேய கு.எண்:11/19 - 498 (A), 406, 506 (1) IPC மற்றும் 407 DP Actபடி வழக்கினைப் பயத்தோடு பதிவு செய்துள்ளது.

 

  மகளிர் நிலையப் போலீஸாரோ, " மதியத்திலிருந்து இரவு 7 மணி வரை அமைச்சரோட உதவியாளரால் மிரட்டப்பட்டது உண்மை தான்.! இந்த வழக்கினைப் பொறுத்தவரை எப்.ஐ.ஆர்.என்பது நிச்சயம். விசாரித்து தான் பதிவு செய்ய முடியும். அதுக்குள்ளே.! நான் இன்னார் ஆள், எஸ்.பி சாரை பேச சொல்லவா.? என்றால் பயப்படாமல் இருக்க முடியுமா.? வேறு வழியில்லை உடனடியாக வழக்கைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று." என்கின்றனர் அவர்கள். புகார்தாரருக்கு அமைச்சரின் உதவியாளர் என்ன உறவுமுறை என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.?

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.