Skip to main content

மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்த எஸ்.ஐ... நெகிழ்ச்சியில் மக்கள்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

SI who brought a part of Madurai district into the security ring! People in resilience

 

மதுரை மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகளவில் நடந்துவந்தன. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் அப்பகுதியில் அதிகளவில் இல்லாததால், குற்றவாளிகளைப் பிடிப்பது காவல்துறைக்குச் சற்று கடினமாக இருந்துவந்தது. 

 

இதன் காரணமாகவும், தனிப்பட்டவர்கள் அவர்களின் கடை, வீடு உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் உறுதுணையாக இருக்கும் சி.சி.டி.வி.களை பொறுத்தச் சொல்லி அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இருந்தபோதிலும், அதனை யாரும் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. 

 

இந்நிலையில், மதுரை மாவட்டம், புதூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்துவரும் பத்மநாதன், அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாகத் தினமும் சென்று கண்காணிப்பு கேமரா பொறுத்துவதனால் என்ன பயன் என்பதை எடுத்துச் சொல்லி வந்தார். அவரின் இந்தத் தொடர் முயற்சியால், அப்பகுதியில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளில் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், புதூர் பகுதியின் புறநகரில் உள்ள குடியிறுப்பு பகுதிகளின் குடியிறுப்பு நல சங்கங்களைச் சந்தித்து கூட்டம் கூட்டி சி.சி.டி.வி.யின் அவசியத்தை உணர்த்தி தெருவெங்கும் கண்காணிப்பு கேமராவை பொறுத்தச் செய்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். 

 

இதுகுறித்து பத்மநாதனிடம் கேட்டபோது, “சார், பல்வேறு வழக்குகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எளிதாக சீக்கிரம் குற்ற செய்ல்களில் ஈடுபடுவோரை பிடிக்க பெரும் உதவியாக சி.சி.டி.வி. இருக்கிறது. எனவே, சி.சி.டி.விகளை அமைக்க மக்களிடம் அதன் பாதுகாப்பு மற்றும் பயன்களை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால் கட்டாயம் முன்வருவார்கள் என்று முடிவு செய்து, முதலில் என் சொந்தக் காசில் நோட்டீஸ் அடித்து ஒவ்வொரு கடையாக, வீடாக நானே நேரில் சென்று கொடுத்தேன். 

 

பின் தினமும் போய் அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் போது, வேறு வழியின்றி கேமரா பொறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி ஏறத்தாழ புதூர் ஏரியாவையே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டேன். என்னால் முடிந்த மக்கள் சேவை இது” என்றார். 

 

இதுகுறித்து புதூர் பகுதி கடைக்காரர் ஆனந்த் என்பவர், “காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் மக்கள், போலீஸ் என்றாலே கொஞ்சம் தள்ளித்தான் நிற்பார்கள். ஆனால் இந்த பத்மநாதன் சார் வந்ததற்கு பிறகு உண்மையாகவே காவல் துறை நண்பன்தான் என்பதை எங்களுக்கு உணரவைத்துள்ளார். இப்படிப் பொறுப்புடனும் அக்கரையுடனும் கனிவுடனும் பழகுவது இங்குள்ள வியாபாரிகள் மட்டுமல்ல, மக்களிடமும் காவலர்கள் மீது நன்மதிப்பு ஒரு படி உயர்ந்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.