Skip to main content

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் மூத்த செய்தியாளர்கள்...! - செய்தித்துறை அமைச்சர் உறுதி

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Senior Journalists on the Press Welfare Board ...! - Confirmed by the Minister of Information

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர் அறிவித்தார். மேலும், குடும்ப காப்பீடு, நல வாரியம் என பல அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு அவை நடைமுறைக்கும் வந்துள்ளன. 

 

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக கரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு, தொழில் முடக்கம், வேலையின்மை, ஊதியமின்மை இப்படி மனித சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி பத்திரிகையாளர் குடும்பங்களையும் பாதித்தது. அதிலிருந்து ஒரளவு மீண்டு வர கடந்த இரண்டு வருடமும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தலா ஒவ்வொரு சிப்பம் அரிசி மற்றும் உணவு பொருட்கள் என மூன்று முறை தொழில் முனைவோரிடம் உதவி பெற்று ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

 

அது மட்டுமில்லாமல் கடந்த 6 வருடங்களாக தமிழர் திருநாளான தைப்பொங்கலை பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் வேட்டி, சட்டை, சேலை என புத்தாடைகள் 25 வகையான உணவு மற்றும்  பொங்கல் பொருட்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான நிகழ்ச்சி 11ந் தேதி மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் வரவேற்று விழாவை தொடங்கி வைத்தார்.

 

Senior Journalists on the Press Welfare Board ...! - Confirmed by the Minister of Information

 

முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க துணை பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் செயல்பாட்டை பாராட்டி பேசினார்.

 

மேலும் அவர் விழாவில் பேசும்போது, "திமுக அரசு அமைந்தவுடன் கரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலை மக்களை காக்க வேண்டும் என்பதை நோக்கியே இரண்டு மூன்று மாதங்கள் ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியிலேயே ஈடுபட்டது. பிறகு தான் அமைச்சர்கள் அவர்களது துறை சம்பந்தமான நிர்வாக செயல்பாட்டுக்கு வர முடிந்தது. நான் செய்தி துறை அமைச்சராக பொறுப்பேற்று பத்திரிகையாளர் அமைப்பு நடத்தும் முதல் விழாவில் கலந்து கொண்டேன் என்றால் அது தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணான எனது சொந்த ஊரில் நடக்கும் இந்த விழா தான். அது எனக்கு பெருமையாக உள்ளது.

 

Senior Journalists on the Press Welfare Board ...! - Confirmed by the Minister of Information

 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தழிழறிஞர் கலைஞர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள்தான். தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடையாள அட்டை, மாவட்ட, தாலுகா, வட்ட அளவிலான செய்தியாளர்கள் அரசின் சலுகைகள் நல உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளது. அவையெல்லாம் பரிசீலித்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் பயன் பெரும் வகையில் தி.மு.க. அரசின் செயல்பாடு அமையும்.

 

பத்திரிகையாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்பட்டு, அதில் அனுபவம் வாய்ந்த மூத்த செய்தியாளர்களை உறுப்பினராக நியமித்து பத்திரிகையாளர்களுக்கான அரசின் அங்கீகார அட்டை, நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களின் குறைகளை நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்தவர். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, நிறைவேற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என நம்பிக்கை கொடுத்தார் அமைச்சர் சாமிநாதன்.

 

இவ்விழாவில் சங்க தலைவர் ரமேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் உட்பட மாவட்டம் முழுக்க உள்ள 150க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.