Skip to main content

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வளர்க்கும் கடல் சாகச பயணம்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
sdfg

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகள் கொண்டு இயங்கும் புதுச்சேரி என்சிசி குழுமம் தனது என்சிசி மாணவர்களுக்காக சமுத்திர நோக்கயான் என்ற கடல் சாகச பயணத்தை ஏற்படு செய்துள்ளது. அந்த பயணத்தின் படி புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு கடலில் சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப வேண்டும். இந்த சாகச பயணத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 25 மாணவிகள் உட்பட 60 என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சாகசக்குழுவினர் கடந்த 4-ந்தேதி கடலூர் வெள்ளி கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து அக்குழுவினர் 5-ந்தேதி காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றனர். 

 

பின்னர்  6-ந் தேதி பிச்சாவரம், கடற்கரை வழியாக இக்குழுவினர் பாய்மர படகு மூலம் புறப்பட்டு பரங்கிப்பேட்டை, பூம்புகார் மார்க்கமாக காரைக்காலை சென்றடைவார்கள். மீண்டும் காரைக்காலில் இருந்து புறப்பட்டு கடலூர் மார்க்கமாக வரும் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தடைவார்கள். இக்குழுவினர் மொத்தம் 302 கிமீ கடல் பயணம் செய்கின்றனர். கடல் பயணம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியையும் தருகிறது. சாகசப்பயணத்தில் துடுப்பு படகு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கடற்படை கமாண்டர்கள் ரவிசங்கர், சுரேஷ்குமார் தலைமையில் பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கடல் சார் உயர் இலக்கு படை தொடக்கம்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Launch of Marine High Target Force

இந்தியாவிலேயே முதன்முறையாக மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை  தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், “இந்த கடல்சார் உயர் இலக்கு படை பவளப்பாறைகள், கடல் புல், பிற கடல் தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்கள் போன்ற மதிப்புமிக்க கடல் பல்லுயிர்களின் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான தொடக்கமாக அமையும்” என்றார்.

மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சுப்ரியா சாஹு  இந்நிகழ்வு பற்றி குறிப்பிடுகையில், “கடல் பல்லுயிர் பெருக்கத்தை பிரத்தியேகமாக கையாள்வதற்கான நீலப் படையை (Blue cadre) உருவாக்க இத்தனித்துவமான முயற்சி உதவியாக இருக்கும். கடல் மற்றும் கடலோர சூழலியலை சிறப்பான முறையில் பாதுகாக்க இந்த உயர் இலக்கு படை தமிழ்நாடு வனத்துறையின் திறனை அதிகரிக்க உறுதுணையாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறைத் தலைவருமான சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வன உயிரினக் காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) வி. நாகநாதன் மற்றும் இராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.