Skip to main content

வகுப்பை கட் அடித்த மாணவனை ஆசிரியர் மூர்க்கமாக தாக்கும் வைரல் வீடியோ!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

school teacher Viral video

 

இயற்பியல் வகுப்பிற்கு வராமல் கட் அடித்துச் சுற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை தரையில் முட்டிப்போட வைத்து, ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றாகும். சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் இயற்பியல் வகுப்பை கட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். முதல் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், இரண்டாவது வகுப்பான இயற்பியல் வகுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியே சென்றுள்ளனர். இதனால், அந்த மாணவர்கள் வசிக்கும் அடூர் கிராமத்திற்குச் சென்று தேடிய ஆசிரியர்கள், அம்மாணவர்களைக் கையோடு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

udanpirape

 

இதனைக் கண்டிக்கும்  விதமாக, அம்மாணவர்களைக் கரும்பலகையின் கீழே முட்டிப் போட வைத்துள்ளார் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன். அதில், ஒரு மாணவர் ஆசிரியரிடம் எதிர்த்துப் பேசியதாகவும் அதைக் கண்டு அங்கிருந்த மாணவர்கள் சிலர் சிரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுப்பிரமணியன், கையில் வைத்திருந்த பிரம்பால் அந்த மாணவனைத் தாக்கியுள்ளார். அத்துடன், கால்களால் அம்மாணவனை எட்டி உதைத்துள்ளார். இதை கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிலர் ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் உள்ளனர். இதனால் இந்த வீடியோ மாவட்ட ஆட்சியர் வரை சென்றுள்ளது.

 

மாணவனை ஆசிரியர் இப்படி மூர்க்கமாகத் தாக்கியது எப்படி தவறோ அதேபோல, படிக்கும் வயதில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தவறுதான். அதேசமயம், பள்ளிக்கு செல்ஃபோன் கொண்டுசெல்ல தடை இருக்கும் நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் ஃபோனை கொண்டு சென்றது எப்படி எனும் கேள்வியும் எழுந்து நிற்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.