Skip to main content

தமிழக அரசை கண்டித்து உப்பு அனுப்பும் போராட்டம்!

Published on 01/04/2018 | Edited on 01/04/2018


 

தமிழக அரசை கண்டித்து உப்பு அனுப்பும் போராட்டத்தினை நடத்தியுள்ளனர் தூத்துக்குடி மாநகர ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
 

 தூத்துக்குடி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகரக்குழு சார்பில் தபால் நிலையத்தில்  நடைபெற்ற இப் போராட்டத்தில்  மாநகரசெயலாளர் கண்ணண், முத்து உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் உப்புப் பாக்கெட்களை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்து கோஷம் எழுப்பினர். காவேரி மேலான்மை வாரியம் அமைக்காத இயலாத, சொரனை இல்லாத தமிழக அரசிற்கு உப்புப் பாக்கெட்களை அனுப்புகிறோம் என்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோடின் கலக்காத 13 டன் உப்பு பறிமுதல்... கோயம்பேட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

13 tons of non-iodinized salt seized... Food Safety Department officials conduct investigation

 

கோயம்பேட்டில் கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அயோடின் இல்லாத உப்பு பொட்டலங்களை டன் கணக்கில் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசுகையில்,''கோயம்பேடு அங்காடியில் ஒரு குடோன் இருந்தது. அந்த குடோனில் நிறைய உப்புக்கள் விற்பனைக்கு வருகிறது என்று தகவல் வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் இன்னைக்கு அந்த குடோனில் சோதனை செய்தோம். அதில் உப்பு மூட்டைகள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. கேட்டதற்கு இதை நாங்கள் இண்டஸ்ட்ரியல் பர்பஸ்க்கு பயன்படுத்துகிறோம் அப்படின்னு சொல்றாங்க. ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் நாங்கள் இங்கு இருக்கக்கூடிய மூட்டைகள் அனைத்தையும் சீஸ் பண்ணி வைத்துவிட்டு, உப்பை எங்கெல்லாம் சப்ளை செய்திருக்கிறார் என்பதற்கான பில்லை கேட்டிருக்கிறோம். அவர் பில்லை கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு சுமார் 13 டன் உப்பை பறிமுதல் செய்திருக்கிறோம்.

 

அயோடின் இல்லாத உப்பு இது எனவே இந்த உப்பை சாதாரணமாக மனிதர்கள் உட்கொள்ளக்கூடாது. அயோடின் இல்லாத உப்பை விற்றதற்கான ப்ராப்பர் பில்லையும், விளக்கத்தையும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் உப்பை நாங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு போக அனுமதிப்போம். இந்த கடையில் யார் யாரெல்லாம் உப்பு வாங்கி இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் விசாரிப்போம். உண்மையிலேயே இந்த உப்பு ட்ரீட்மென்ட்க்கு போகிறதா என்பதை நாங்கள் விசாரணை செய்வோம். இந்த உப்பு எங்கே எங்கே செல்கிறது என்பதை டிரேஸ் பண்ணிடலாம். அயோடின் கலந்த உப்புதான் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி சட்டமே இயற்றி இருக்கிறார்கள். ஒரு கிலோ, இரண்டு கிலோ பாக்கெட்டில் தான் உப்பு இருக்க வேண்டும். அதன் மேலேயே அயோடின் உண்டு என போட்டிருக்க வேண்டும். உப்பளங்களில் உப்பு தயாரிக்கப்படும் பொழுது அயோடின் அளவு முப்பது பிபிஎம் இருக்க வேண்டும். (பார்ட்ஸ் பெர் மில்லியன்-PPM) கடைகளுக்கு வரும் பொழுது 15-ல் இருந்து 10 பிபிஎம் அளவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இருந்தால் தான் அந்த உப்பு அயோடின் கலந்த தரமான உப்பு என்று நாம் சொல்கிறோம். அயோடின் இல்லாத உப்பை அரசு தடை செய்துள்ளது. அயோடின் கலக்காத உப்புகளை யாராவது வீட்டிற்கு சமைப்பதற்காக வியாபாரம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

Next Story

உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கிறது!: அச்சுறுத்தும் ஆய்வு

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான உப்பு பாக்கெட்டுகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. அதாவது நாம் உணவுக்கு உப்பிடும்போது, நம்மையறியமாலே நுண்பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்துத்தான் சாப்பிடுகிறோம்.
 

Salt

 

 

 

மும்பை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த உப்பு ஆய்வில் இறங்கி மேற்கண்ட தகவலை உறுதிசெய்துள்ளனர். இந்தியாவின் பிரபலமான பிராண்டட் உப்புகளிலும் இவை காணப்படுகின்றன என அவர்கள் கூறுகின்றனர். எனினும் எந்தெந்த ப்ராண்ட் உப்புகளில் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் காணப்படுகின்றன என இந்த ஆய்வு வெளிப்படுத்தவில்லை. 
கடல் மாசுபடுவதன் விளைவே, உப்பில் காணப்படும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் எனக் கூறுகிறது இந்த ஆய்வு. உலக அளவில் உப்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த நுண்பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்கெனவே நமது உணவுச்சங்கிலியில் இடம்பிடித்துவிட்டதை சர்வதேச ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மீன், நண்டு போன்ற கடலுணவின் வழியாக நுழைந்தது, இப்போது உப்பின் வழியாகவும் நம் குடலைச் சென்றடைய ஆரம்பித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ உப்பில் 0.063 மில்லிகிராம் பிளாஸ்டிக் நுண்துகள் வரை காணப்படுகிறதாம்.
 

நேரடியாக கப்பல்களிலிருந்து கடலுக்குள் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைவிட, ஆறுகள், முகத்துவாரங்கள் வழியாக கடலைச் சென்றடையும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் அதிகம். நாளடைவில் இவை சிதைந்து நுண் பிளாஸ்டிக் துகள்களாக மாறுகின்றன. இத்தகைய கடல்நீரிலிருந்து உப்பு தயாரிக்கும்போது, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் எப்படி இல்லாமல் போகும்?
 

 

 

கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதைத் தடுக்காதவரை, உப்பிலும், கடல் உணவிலும் கலக்கும் பிளாஸ்டிக் நுண்நுகளைத் தடுக்கமுடியாதாம். என்ன ஒரு ஆறுதலென்றால், நம் நாட்டு உப்பில் மட்டுமல்லாமல் உலகமெங்குமே உப்பில் இந்த நுண்துகள்கள் காணப்படுகிறதாம்.
 

கரையில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், கடலில் சென்றுசேரும் பிளாஸ்டிக்கின் அளவு குறைந்து சுத்தமான உப்பு நமக்குக் கிடைக்கும்.