Skip to main content

பேருந்து நடத்துநர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

salem incident... police investigation

 

சேலம் அருகே, தனியார் பேருந்து நடத்துநர் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய தோழி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சேலத்தை அடுத்துள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தனியார் பேருந்து நடத்துநர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்ந்துவரும் உமாமகேஸ்வரி (36) என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்துவந்தது.

 

இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுப்ரமணி அதே பகுதியில் வேறு வீட்டுக்குக் குடியேறினார்.

 

அப்போது பழைய வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு புதிய வீட்டில் சேர்ப்பதற்காக செங்காட்டூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜனை அழைத்திருந்தார். அவரும் லாரியுடன் வந்து கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றிக்கொண்டு புதிய வீட்டில் கொண்டுசென்று இறக்கினார்.

 

அப்போது நாகராஜனுக்கும், உமா மகேஸ்வரிக்கும் முதன்முதலாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கவே, சுப்ரமணி வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம் நாகராஜனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார் உமா மகேஸ்வரி.

 

இதை அரசல் புரசலாக தெரிந்துகொண்ட சுப்ரமணி, உமா மகேஸ்வரியை கண்டித்துள்ளார். போதாகுறைக்கு, நாகராஜனுக்குத் தெரியாமல் கண்ணன் என்பவருடனும் அவர் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

 

salem incident... police investigation

 

இந்த விவகாரமும் தெரியவந்ததால் சுப்ரமணி, உமாமகேஸ்வரியை அடித்து உதைத்துள்ளார். நாளுக்கு நாள் அடியும் உதையும் அதிகரிக்கவே, இனியும் சுப்ரமணி உயிரோடு இருந்தால் தன்னால் சந்தோஷமாக வாழ முடியாது எனக் கருதிய உமா மகேஸ்வரி, அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.

 

இதுகுறித்து தன்னுடன் நெருக்கமாக பழகிவரும் நாகராஜன், கண்ணன் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் சுப்ரமணியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

 

இதையடுத்து ஜூன் 11ஆம் தேதி இரவு, சுப்ரமணிக்கு சாத்துக்குடி பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்திருக்கிறார் உமா மகேஸ்வரி. அவர் கண் அசந்த நேரம் பார்த்து, ஆண் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்த உமா மகேஸ்வரி, சுப்ரமணியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். ஆண் நண்பர்கள் இருவரும் சுப்ரமணியின் கை, கால்களை அமுக்கிப் பிடித்துக்கொண்டனர்.

 

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த இரும்பாலை காவல் நிலைய காவல்துறையினர், உமா மகேஸ்வரி, அவருடைய ஆண் நண்பர்கள் நாகராஜன், கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். காவல்துறையினர் உமா மகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சுப்ரமணியோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும், அதே காலக்கட்டத்தில் உமா மகேஸ்வரிக்கு உள்ளூரில் வேறு சில ஆண்களிடமும் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. லாரி ஓட்டுநர் நாகராஜன், அவருடைய நண்பர் கண்ணன் ஆகியோருடனும் நெருக்கத்தில் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் சோளம்பள்ளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து, உமா மகேஸ்வரியை அடிக்கடி அந்த வீட்டுக்கு வரவழைத்து நெருக்கமான உறவில் இருந்துள்ளனர்.

 

இதையெல்லாம் தெரிந்துகொண்ட சுப்ரமணி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். உமா மகேஸ்வரியை நாள்தோறும் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

 

''அழகாக இருக்கும் திமிரில்தானே சுற்றித்திரிகிறாய்...? என்கூட மட்டும்தான் வாழ வேண்டும். இனிமேல் வேறு எந்த ஆம்பிளைக்கூடவாவது உன்னைப் பார்த்தால் அந்த இடத்திலேயே ஆசிட் ஊற்றி கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டியுள்ளார்.

 

அதன்பிறகே சுப்ரமணியை தீர்த்துக்கட்ட முடிவுசெய்து, கொலைத் திட்டத்தை உமா மகேஸ்வரி அரங்கேற்றியுள்ளார்.

 

சம்பவத்தன்று இரவு சுப்ரமணியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த பிறகும் ஆத்திரம் அடங்காத உமா மகேஸ்வரி, அவருடைய ஆணுறுப்பை நசுக்கியும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொன்றிருக்கிறார்.

 

இந்த விவரங்கள் அனைத்தும் உமா மகேஸ்வரி வாக்குமூலமாக அளித்துள்ளார். இதையடுத்து, கைதான மூவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், உமா மகேஸ்வரி சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்ற இருவரும் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.